இணை வசன வேதாகமம்

லேவியராகமம் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும், அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும், அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால், அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார்.லேவி 5:15 லேவி 5:17 லேவி 4:2 எசே 18:4 எசே 18:20
2ஒருவர் தீட்டான எதையும்-செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ, செத்துத் தீட்டான கால்நடையையோ, செத்துத் தீட்டான ஊர்வனவற்றையோ-தெரியாமல் தொட்டுவிட்டாலும் அவர் தீட்டுப்பட்டவரே.அவர் குற்றவாளி ஆவார்.லேவி 7:21 லேவி 11:24 லேவி 11:28 லேவி 11:31 லேவி 11:39 எண் 19:11-16 உபா 14:8 ஏசா 52:11 ஆகா 2:13 2கொரி 6:17
3மேலும் எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதரை ஒருவர் அறியாமலே தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே.லேவி 12:1-13 லேவி 15:1-33 லேவி 22:4-6 எண் 19:11-16
4தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே.லேவி 27:2-34 யோசு 2:14 யோசு 9:15 நியா 9:19 நியா 11:31 நியா 21:7 நியா 21:18 1சாமு 1:11 1சாமு 14:24-28 1சாமு 24:21 1சாமு 24:22 1சாமு 25:22 2சாமு 21:7 2இரா 6:31 சங் 132:2-5 பிரச 5:2-6 எசே 17:18 எசே 17:19 மத் 14:7 மத் 14:9 மாற் 6:23 அப் 23:12
5மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,லேவி 16:21 லேவி 26:40 எண் 5:7 யோசு 7:19 எஸ்றா 10:11 எஸ்றா 10:12 யோபு 33:27 சங் 32:5 நீதி 28:13 எரே 3:13 தானி 9:4 ரோம 10:10 1யோவா 1:8-10
6பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும்.ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும்.அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.லேவி 4:28 லேவி 4:32 லேவி 6:6 லேவி 7:1-7 லேவி 14:12 லேவி 14:13 லேவி 19:21 லேவி 19:22 எண் 6:12 எசே 40:39 எசே 42:13
7அவர் தம் குற்றப்பழியை அகற்ற, ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால், இரு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,லேவி 5:11 லேவி 12:8 லேவி 14:21 2கொரி 8:12 யாக் 2:5 யாக் 2:6
8அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.லேவி 1:15 ரோம 4:25 1பேது 3:18
9பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீட ஓரங்களைச் சுற்றிலும் தெளித்து எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும்.இது பாவம் போக்கும் பலி.லேவி 1:5 லேவி 4:25 லேவி 4:30 லேவி 4:34 லேவி 7:2 யாத் 12:22 யாத் 12:23 ஏசா 42:21 எபிரெ 2:10 எபிரெ 12:24
10இரண்டாவதை ஒழுங்குமுறைப்படி அவர் எரிபலிக்கெனச் செலுத்தவேண்டும்.அவர் செய்த பாவம் நீங்கக் குரு பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார்.லேவி 1:14-17 எபே 5:2
11இரண்டு காட்டுப் புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர இயலாதிருந்தால் குற்றவாளி தாம் செய்த குற்றத்தினிமித்தம் தாம் படைக்கும் காணிக்கைக்கென இருபதுபடி அளவு மிருதுவான மாவில் பத்தில் ஒருபங்கைக் கொண்டுவருவாராக.அதன் மேல் எண்ணெயோ சாம்பிராணியோ இடலாகாது.ஏனெனில் அது பாவம் போக்கும் பலி.யாத் 16:18 யாத் 16:36
12அது குருவிடம் கொண்டு வரப்படவேண்டும்.குரு நினைவுப்பங்காக ஒரு கைப்பிடி நிறைய எடுத்து ஆண்டவரின் நெருப்புப்பலிகளோடு பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். இது பாவம் போக்கும் பலி.லேவி 2:2 லேவி 2:9 லேவி 2:16 லேவி 6:15 எண் 5:26 அப் 10:4 எபே 5:2
13இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக.அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார்.எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.லேவி 5:6 லேவி 4:20 லேவி 4:26 லேவி 4:31
14ஆண்டவா மோசேயிடம் கூறியது:
15ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக.அது திருத்தலச் செக்கேல் கணக்குக்கேற்ப நீ விதிக்குமளவு மதிப்புடையதாய் இருக்கவேண்டும்.லேவி 5:1 லேவி 5:2 லேவி 4:2
16அர்ப்பணித்தவற்றில் தவறிழைத்தால், ஈட்டுத் தொகையோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக்கிக் கொடுக்க வேண்டும்.அதைக் குருவிடமே கொடுக்க வேண்டும்.குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும்.அப்பொழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.லேவி 22:14 யாத் 22:1 யாத் 22:3 யாத் 22:4 சங் 69:4 லூக் 19:8 அப் 26:20
17ஆண்டவரின் கட்டளைகளின்படி, செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் செய்து பாவத்திற்கு உள்ளானால், அவர் அறியாமல் செய்தாலும்கூட, அவர் குற்றவாளியே. அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.லேவி 5:1 லேவி 4:2-4 லேவி 4:13-4 லேவி 4:22-4 லேவி 4:27-4
18அவர் நீ விதிக்கும் மதிப்பிற்கு ஏற்ப, பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆட்டு மந்தையிலிருந்து பிடித்து அதைக் குற்றப்பழி நீக்கும் பலியாகக் குருவிடம் கொண்டு வருவார்.அவர் அறியாமல் செய்த பிழைக்காகக் குரு அவருக்கெனக் கறைநீக்கம் செய்வார்.அது அவருக்கு மன்னிக்கப்படும்.லேவி 5:15 லேவி 5:16
19அது குற்றப்பழி நீக்கும் பலி.அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.எஸ்றா 10:2 சங் 51:4 மல்கி 3:8 2கொரி 5:19-21

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.