1 | இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும் எபேசு நகர இறைமக்களுக்கு, கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாயிருக்கும் பவுல் எழுதுவது: | ரோம 1:1 1கொரி 1:1 கலா 1:1 |
2 | நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அரளும் அமைதியும் உரித்தாகுக! | ரோம 1:7 2கொரி 1:2 கலா 1:3 தீத் 1:4 |
3 | நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். | ஆதி 14:20 1நாளா 29:20 நெகே 9:5 சங் 72:19 தானி 4:34 லூக் 2:28 2கொரி 1:3 1பேது 1:3 வெளிப் 4:9-11 வெளிப் 5:9-14 |
4 | நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். | உபா 7:6 உபா 7:7 சங் 135:4 ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 42:1 ஏசா 65:8-10 மத் 11:25 மத் 11:26 மத் 24:22 மத் 24:24 மத் 24:31 யோவா 10:16 அப் 13:48 அப் 18:10 ரோம 8:28 ரோம 8:30 ரோம 8:33 ரோம 9:23 ரோம 9:24 ரோம 11:5 ரோம 11:6 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 2:10 தீத் 1:1 தீத் 1:2 யாக் 2:5 1பேது 1:2 1பேது 2:9 |
5 | அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்: | எபே 1:11 ரோம 8:29 ரோம 8:30 |
6 | இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். | எபே 1:7 எபே 1:8 எபே 1:12 எபே 1:14 எபே 1:18 எபே 2:7 எபே 3:10 எபே 3:11 நீதி 16:4 ஏசா 43:21 ஏசா 61:3 ஏசா 61:11 எரே 33:9 லூக் 2:14 ரோம 9:23 ரோம 9:24 2கொரி 4:15 பிலிப் 1:11 பிலிப் 4:19 2தெச 1:8-10 1தீமோ 1:14-16 1பேது 2:9 1பேது 4:11 |
7 | கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். | யோபு 33:24 சங் 130:7 தானி 9:24-26 சகரி 9:11 சகரி 13:1 சகரி 13:7 மத் 20:28 மத் 26:28 மாற் 14:24 அப் 20:28 ரோம 3:24 1கொரி 1:30 கொலோ 1:14 1தீமோ 2:6 தீத் 2:14 எபிரெ 9:12-15 எபிரெ 9:22-15 எபிரெ 10:4-12 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 1யோவா 4:10 வெளிப் 5:9 வெளிப் 14:4 |
8 | அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார். | ரோம 5:15 ரோம 5:20 ரோம 5:21 |
9 | அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். | எபே 1:17 எபே 1:18 எபே 3:3-9 மத் 13:11 ரோம 16:25-27 1கொரி 2:10-12 கலா 1:12 கலா 1:16 கொலோ 1:26-28 1தீமோ 3:16 |
10 | கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். | ஏசா 2:2-4 தானி 2:44 தானி 9:24-27 ஆமோ 9:11 மீகா 4:1 மீகா 4:2 மல்கி 3:1 1கொரி 10:11 கலா 4:4 எபிரெ 1:2 எபிரெ 9:10 எபிரெ 11:40 1பேது 1:20 |
11 | கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். | எபே 1:14 சங் 37:18 அப் 20:32 அப் 26:18 ரோம 8:17 கலா 3:18 கொலோ 1:12 கொலோ 3:24 தீத் 3:7 யாக் 2:5 1பேது 1:4 1பேது 3:9 |
12 | இவ்வாறு கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார். | எபே 1:6 எபே 1:14 எபே 2:7 எபே 3:21 2தெச 2:13 |
13 | நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். | எபே 2:11 எபே 2:12 கொலோ 1:21-23 1பேது 2:10 |
14 | அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும். | ரோம 8:15-17 ரோம 8:23-17 2கொரி 1:22 2கொரி 5:5 கலா 4:6 |
15 | ஆகவே, ஆண்டவராகிய இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, | கொலோ 1:3 கொலோ 1:4 பிலேமோ 1:5 |
16 | நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவுகூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை. | ரோம 1:8 ரோம 1:9 1சாமு 7:8 1சாமு 12:23 பிலிப் 1:3 பிலிப் 1:4 கொலோ 1:3 1தெச 5:17 2தெச 1:3 |
17 | நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராhக! | எபே 1:3 யோவா 20:17 |
18 | கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், | எபே 5:8 சங் 119:18 ஏசா 6:10 ஏசா 29:10 ஏசா 29:18 ஏசா 32:3 ஏசா 42:7 மத் 13:15 லூக் 24:45 அப் 16:14 அப் 26:18 2கொரி 4:4 2கொரி 4:6 எபிரெ 10:32 |
19 | அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, | எபே 2:10 எபே 3:7 எபே 3:20 சங் 110:2 சங் 110:3 ஏசா 53:1 யோவா 3:6 அப் 26:18 ரோம 1:16 2கொரி 4:7 2கொரி 5:17 பிலிப் 2:13 கொலோ 1:29 கொலோ 2:12 1தெச 1:5 2தெச 1:11 யாக் 1:18 |
20 | கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். | எபே 2:5 எபே 2:6 ரோம 6:5-11 பிலிப் 3:10 1பேது 1:3 |
21 | அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். | பிலிப் 2:9 பிலிப் 2:10 கொலோ 2:10 எபிரெ 1:4 |
22 | அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். | ஆதி 3:15 சங் 8:6-8 சங் 91:13 1கொரி 15:25-27 எபிரெ 2:8 |
23 | திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது. | எபே 2:16 எபே 4:4 எபே 4:12 எபே 5:23-32 ரோம 13:5 1கொரி 12:12-27 கொலோ 1:18 கொலோ 1:24 கொலோ 3:15 |