1இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியைக் குறித்து உங்களுக்கு நான் தொடர்ந்து எழுதத் தேவையில்லை.ஆதி 27:42 1சாமு 20:23 2இரா 22:18 யோபு 37:23 சங் 45:1 மத் 22:31 ரோம 11:28 பிலிப் 3:5 பிலிப் 3:6 2உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்குத் தெரிந்ததே. அதைக் குறித்து மாசிதோனிய மக்களிடம் பெருமையோடு பேசியிருக்கிறேன். அக்காயா மாநில மக்கள் கடந்த ஆண்டிலிருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் எனவும் சொல்லியிருக்கிறேன். இந்த உங்கள் ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.2கொரி 8:8 2கொரி 8:10 2கொரி 8:19 1தெச 1:7 3எனவே இந்த அறப்பணியைப் பொறுத்த வரையில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியது பொருளற்ற பேச்சல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் நான் சொன்னதற்கேற்ப நீங்கள் பொருளுதவி செய்யத் தக்க ஏற்பாட்டுடன் இருக்கவுமே இந்த மூன்று சகோதரர்களையும் அனுப்புகிறேன்.2கொரி 9:4 2கொரி 7:14 2கொரி 8:6 2கொரி 8:17-24 4என்னோடு வரும் மாசிதோனியர் நீங்கள் பொருளுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கண்டால் நாங்கள் வெட்கமுற வேண்டியிருக்கும்: நீங்களும் வெட்கமுற வேண்டியிருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மீது நான் அத்துணைத் திடநம்பிக்கை கொண்டிருக்கிறேன் அல்லவா!2கொரி 9:2 2கொரி 8:1-5 5இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்னால் உங்களிடம் வந்து நீங்கள் வாக்களித்த நன்கொடையைத் திரட்டி வைக்க முன்னேற்பாடு செய்தால் நான் அங்கு வரும்போது அது தயார் நிலையில் இருக்கும். அது கட்டாயப்படுத்தித் திரட்டப்பட்டதாக அன்றி, நீங்களாகக் கொடுத்த நன்கொடையாகவும் இருக்கும்.2கொரி 8:6 1கொரி 16:2 6குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.1கொரி 1:12 1கொரி 7:29 1கொரி 15:20 கலா 3:17 கலா 5:16 எபே 4:17 கொலோ 2:4 7ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.உபா 15:7-11 உபா 15:14-11 நீதி 23:6-8 ஏசா 32:5 ஏசா 32:8 யாக் 5:9 1பேது 4:9 8கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்: அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.2நாளா 25:9 சங் 84:11 நீதி 3:9 நீதி 10:22 நீதி 11:24 நீதி 28:27 ஆகா 2:8 மல்கி 3:10 பிலிப் 4:18 9‘ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!சங் 112:9 10விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.ஆதி 1:11 ஆதி 1:12 ஆதி 47:19 ஆதி 47:23 ஆதி 47:24 ஏசா 55:10 11நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணிவழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.2கொரி 8:2 2கொரி 8:3 1நாளா 29:12-14 2நாளா 31:10 நீதி 3:9 நீதி 3:10 மல்கி 3:10 மல்கி 3:11 1தீமோ 6:17 1தீமோ 6:18 12நீங்கள் திருத்தொண்டாக ஏற்றுக்கொண்ட இப்பணி இறைமக்களின் தேவையை நிறைவு செய்வது மட்டுமன்றிப் பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும்.2கொரி 9:1 2கொரி 8:4 13இவ்வாறு நீங்கள் ஏற்று அறிக்கையிடும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு நீங்கள் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்: அவர்களுக்கும் மற்றெல்லாருக்கும் நீங்கள் செய்த உங்கள் பொருளுதவியால் உங்கள் வள்ளன்மை வெளிப்படும். இவ்வாறு அவர்கள் இந்த அறப்பணியின் விளைவாகக் கடவுளைப் போற்றிப் புகழ்வார்கள்.சங் 50:23 மத் 5:16 யோவா 15:8 அப் 4:21 அப் 11:18 அப் 21:19 அப் 21:20 கலா 1:24 1பேது 2:9 1பேது 4:11 14கடவுள் உங்கள் மீது அளவற்ற அருள் பொழிந்துள்ளதால் அவர்கள் உங்களோடு நெருங்கிய ஈடுபாடு கொண்டு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவர்.2கொரி 1:11 எஸ்றா 6:8-10 சங் 41:1 சங் 41:2 நீதி 11:26 லூக் 16:9 பிலிப் 4:18 பிலிப் 4:19 2தீமோ 1:16-18 15கடவுளின் சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கே நன்றி உரித்தாகுக!2கொரி 9:11 2கொரி 2:14 1நாளா 16:8 1நாளா 16:35 சங் 30:4 சங் 30:12 சங் 92:1 லூக் 2:14 லூக் 2:38 1கொரி 15:57 எபே 5:20 யாக் 1:17 வெளிப் 4:9