இணை வசன வேதாகமம்

1கொரிந்தியர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும்.1கொரி 4:13 2கொரி 12:6
2பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ!1கொரி 4:17 1கொரி 7:25 எண் 12:7 நீதி 13:17 மத் 25:21 மத் 25:23 லூக் 12:42 லூக் 16:10-12 2கொரி 2:17 2கொரி 4:2 கொலோ 1:7 கொலோ 4:7 கொலோ 4:17
3என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.1கொரி 2:15 1சாமு 16:7 யோவா 7:24
4எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.யோபு 27:6 சங் 7:3-5 யோவா 21:17 2கொரி 1:12 1யோவா 3:20 1யோவா 3:21
5எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்: உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.மத் 7:1 மத் 7:2 லூக் 6:37 ரோம 2:1 ரோம 2:16 ரோம 14:4 ரோம 14:10-13 யாக் 4:11
6சகோதர சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில் “எழுதியுள்ளதற்கு மேல் போகாதே “ என்பதின் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்: இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.1கொரி 1:12 1கொரி 3:4-7 2கொரி 10:7 2கொரி 10:12 2கொரி 10:15 2கொரி 11:4 2கொரி 11:12-15
7நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?1கொரி 12:4-11 1கொரி 15:10 ரோம 9:16-18 எபே 3:3-5 2தெச 2:12-14 1தீமோ 1:12-15 தீத் 3:3-7
8தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.1கொரி 1:5 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 5:6 நீதி 13:7 நீதி 25:14 ஏசா 5:21 லூக் 1:51-53 லூக் 6:25 ரோம 12:3 ரோம 12:16 கலா 6:3 வெளிப் 3:17
9கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்: நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.1கொரி 15:30-32 2கொரி 1:8-10 2கொரி 4:8-12 2கொரி 6:9 பிலிப் 1:29 பிலிப் 1:30 1தெச 3:3
10நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்: நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்: நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்: நாங்களோ மதிப்பற்றவர்கள்.1கொரி 1:1-3 1கொரி 1:18-20 1கொரி 1:26-28 1கொரி 2:3 1கொரி 2:14 1கொரி 3:18 2இரா 9:11 ஓசி 9:7 அப் 17:18 அப் 17:32 அப் 26:24
11இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்: நாடோடிகளாய் இருக்கிறோம்.1கொரி 9:4 2கொரி 4:8 2கொரி 6:4 2கொரி 6:5 2கொரி 11:26 2கொரி 11:27 பிலிப் 4:12
12எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம்: துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம்.1கொரி 9:6 அப் 18:3 அப் 20:34 1தெச 2:9 2தெச 3:8 1தீமோ 4:10
13அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.புலம் 3:45 அப் 22:22
14உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை: நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.1கொரி 9:15 2கொரி 7:3 2கொரி 12:19
15கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்: ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.2தீமோ 4:3
16ஆகையால் நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்.1கொரி 11:1 யோவா 10:4 யோவா 10:5 பிலிப் 3:17 1தெச 1:6 2தெச 3:9 எபிரெ 13:7 1பேது 5:3
17இதற்காகவே, திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர் என் அன்பார்ந்தபிள்ளை. ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர். நான் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலையில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார். அவற்றையே நான் எங்கும் எல்லாத் திருச்சபைகளிலும் கற்பித்து வருகிறேன்.1கொரி 16:10 அப் 19:21 அப் 19:22 பிலிப் 2:19 1தெச 3:2 1தெச 3:3
18நான் உங்களிடம் வரப்போவதில்லை என உங்களுள் சிலர் எண்ணி இறுமாப்புக் கொண்டிருக்கின்றனர்.1கொரி 4:6-8 1கொரி 5:2
19ஆனால் ஆண்டவர் திருவுளம் கொண்டால் நான் உங்களிடம் விரைவிலேயே வருவேன். இறுமாப்புக் கொண்டுள்ள அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல, அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்.1கொரி 14:5 அப் 19:21 2கொரி 1:15 2கொரி 1:17 2கொரி 1:23 2கொரி 2:1 2கொரி 2:2
20இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது.1கொரி 1:24 1கொரி 2:4 ரோம 1:16 ரோம 14:17 ரோம 15:19 2கொரி 10:4 2கொரி 10:5 1தெச 1:5
21நான் பிரம்போடு வரவேண்டுமா அல்லது அன்போடும் கனிவான உள்ளத்தோடும் வரவேண்டுமா? எதை விரும்புகிறீர்கள்?1கொரி 5:5 2கொரி 10:2 2கொரி 10:6 2கொரி 10:8 2கொரி 12:20 2கொரி 12:21 2கொரி 13:2 2கொரி 3:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.