1 | ஆண்டவர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்: என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்: தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்” என்றார். | யாத் 14:13 எண் 23:23 உபா 32:39 2இரா 7:2 2இரா 7:19 2நாளா 20:17 சங் 12:5 |
2 | கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: | யாத் 6:6 யாத் 6:8 யாத் 14:18 யாத் 17:1 யாத் 20:2 ஆதி 15:7 ஏசா 42:8 ஏசா 43:11 ஏசா 43:15 ஏசா 44:6 எரே 9:24 மல்கி 3:6 அப் 17:24 அப் 17:25 |
3 | “நானே ஆண்டவர்.ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் யாக்கோபுக்கும்ஆண்டவர்”என்ற என்பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே! | ஆதி 17:1 ஆதி 28:3 ஆதி 35:11 ஆதி 48:3 |
4 | மேலும் அவர்கள் அன்னியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே! | ஆதி 6:18 ஆதி 15:18 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 17:13 ஆதி 28:4 2சாமு 23:5 ஏசா 55:3 |
5 | மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன். | யாத் 2:24 யாத் 3:7 சங் 106:44 ஏசா 63:9 |
6 | நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: நானே ஆண்டவர்.எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன்.அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன்.ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன். | யாத் 6:2 யாத் 6:8 யாத் 6:29 எசே 20:7-9 |
7 | உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன்.உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன்.எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். | யாத் 19:5 யாத் 19:6 ஆதி 17:7 ஆதி 17:8 உபா 4:20 உபா 7:6 உபா 14:2 உபா 26:18 2சாமு 7:23 2சாமு 7:24 எரே 31:33 ஓசி 1:10 1பேது 2:10 |
8 | ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன்.அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன்.நானே ஆண்டவர்!” | ஆதி 14:22 உபா 32:40 எசே 20:5 எசே 20:6 எசே 20:15 எசே 20:23 எசே 20:28 எசே 20:42 எசே 36:7 எசே 47:14 |
9 | இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின்கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை. | யாத் 5:21 யாத் 14:12 யோபு 21:4 நீதி 14:19 |
10 | ஆண்டவர் மோசேயை நோக்கி, |
11 | “எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்” என்றுரைத்தார். | யாத் 6:29 யாத் 3:10 யாத் 5:1 யாத் 5:23 யாத் 7:1 |
12 | மோசே ஆண்டவரிடம் பேசி, “இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்” என்று சொன்னார். | யாத் 6:9 யாத் 3:13 யாத் 4:29-31 யாத் 5:19-21 |
13 | ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். | எண் 27:19 எண் 27:23 உபா 31:14 சங் 91:11 மத் 4:6 1தீமோ 1:18 1தீமோ 5:21 1தீமோ 6:13 1தீமோ 6:17 2தீமோ 2:4 2தீமோ 4:1 |
14 | அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே: இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள். | யாத் 6:25 யோசு 14:1 யோசு 19:51 1நாளா 5:24 1நாளா 7:2 1நாளா 7:7 1நாளா 8:6 |
15 | சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள். | ஆதி 46:10 எண் 26:12 எண் 26:13 1நாளா 4:24 |
16 | தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி.லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள். | ஆதி 46:11 எண் 3:17 1நாளா 6:1 1நாளா 6:16 |
17 | கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி.இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள். | ஆதி 46:11 எண் 3:18 |
18 | கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள். | எண் 3:19 |
19 | மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி.இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள். | எண் 3:20 1நாளா 6:19 1நாளா 23:21 |
20 | அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான்.அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள். | யாத் 2:1 யாத் 2:2 எண் 26:59 |
21 | இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி. | யாத் 6:24 எண் 16:1 எண் 16:32 எண் 26:10 எண் 26:11 1நாளா 6:37 1நாளா 6:38 |
22 | உசியேலின் புதல்வர்: மீசாவேல், எல்சாபான், சித்ரி. | லேவி 10:4 நெகே 3:20 |
23 | அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார்.அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள். | லூக் 1:5 |
24 | கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு.இவைகளே கோராகின் குடும்பங்கள். | யாத் 6:21 எண் 16:1 எண் 16:32 எண் 26:9-11 1நாளா 6:22 1நாளா 6:33 1நாளா 6:37 1நாளா 6:38 சங் 84:1-12 சங் 85:1 |
25 | ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான்.அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே. | எண் 25:7-13 எண் 31:6 யோசு 22:13 யோசு 22:31 யோசு 22:32 யோசு 24:33 நியா 20:28 சங் 106:30 சங் 106:31 |
26 | தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள்”என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே. | யாத் 6:13 யாத் 6:20 யோசு 24:5 1சாமு 12:6 1சாமு 12:8 1நாளா 6:3 சங் 77:20 சங் 99:6 மீகா 6:4 |
27 | இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே! | யாத் 5:1-3 யாத் 7:10 |
28 | அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார். |
29 | ஆண்டவர் மோசேயுடன் பேசி, “நானே ஆண்டவர்.நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு” என்று அறிவித்தபோது, | யாத் 6:2 யாத் 6:6 யாத் 6:8 |
30 | மோசே ஆண்டவரிடம், “பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன்.பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?” என்றார். | யாத் 6:12 யாத் 4:10 1கொரி 9:16 1கொரி 9:17 |