இணை வசன வேதாகமம்

எபேசியர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.எபே 2:5 எபே 2:6 எபே 1:19 எபே 1:20 யோவா 5:25 யோவா 10:10 யோவா 11:25 யோவா 11:26 யோவா 14:6 ரோம 8:2 1கொரி 15:45 கொலோ 2:13 கொலோ 3:1-4
2அப்பொழுது நீங்கள் இவ்வுலகப்போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள்.எபே 2:3 எபே 4:22 யோபு 31:7 அப் 19:35 1கொரி 6:11 கொலோ 1:21 கொலோ 3:7 1பேது 4:3 1யோவா 5:19
3இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.ஏசா 53:6 ஏசா 64:6 ஏசா 64:7 தானி 9:5-9 ரோம 3:9-19 1கொரி 6:9-11 கலா 2:15 கலா 2:16 கலா 3:22 தீத் 3:3 1பேது 4:3 1யோவா 1:8-10
4ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார்.எபே 2:7 எபே 1:7 எபே 3:8 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 நெகே 9:17 சங் 51:1 சங் 86:5 சங் 86:15 சங் 103:8-11 சங் 145:8 ஏசா 55:6-8 தானி 9:9 யோனா 4:2 மீகா 7:18-20 லூக் 1:78 ரோம 2:4 ரோம 5:20 ரோம 5:21 ரோம 9:23 ரோம 10:12 1தீமோ 1:14 1பேது 1:3
5குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.எபே 2:1 ரோம 5:6 ரோம 5:8 ரோம 5:10
6இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.எபே 1:19 எபே 1:20 ரோம 6:4 ரோம 6:5 கொலோ 1:18 கொலோ 2:12 கொலோ 2:13 கொலோ 3:1-3
7கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்.எபே 3:5 எபே 3:21 சங் 41:13 சங் 106:48 ஏசா 60:15 1தீமோ 1:17
8நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை.எபே 2:5 ரோம 3:24 2தெச 1:9
9இது மனிதச் செயல்காளல் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது.ரோம 3:20 ரோம 3:27 ரோம 3:28 ரோம 4:2 ரோம 9:11 ரோம 9:16 ரோம 11:6 1கொரி 1:29-31 2தீமோ 1:9 தீத் 3:3-5
10ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.உபா 32:6 சங் 100:3 சங் 138:8 ஏசா 19:25 ஏசா 29:23 ஏசா 43:21 ஏசா 44:21 ஏசா 60:21 ஏசா 61:3 எரே 31:33 எரே 32:39 எரே 32:40 யோவா 3:3-6 யோவா 3:21-6 1கொரி 3:9 2கொரி 5:5 2கொரி 5:17 பிலிப் 1:6 பிலிப் 2:13 எபிரெ 13:21
11எனவே, பிறப்பால் பிற இனத்தாராய் இருக்க நீங்கள், உங்கள் முன்னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள். ஊடலில் கையால் விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்யாதோர் எனக் கூறி இகழ்ந்தார்கள்.எபே 5:8 உபா 5:15 உபா 8:2 உபா 9:7 உபா 15:15 உபா 16:12 ஏசா 51:1 ஏசா 51:2 எசே 16:61-63 எசே 20:43 எசே 36:31 1கொரி 6:11 1கொரி 12:2 கலா 4:8 கலா 4:9
12அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும், வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அன்னியர்களாகவும், எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள்.யோவா 10:16 யோவா 15:5 கொலோ 1:21
13ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.ரோம 8:1 1கொரி 1:30 2கொரி 5:17 கலா 3:28
14ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.ஏசா 9:6 ஏசா 9:7 எசே 34:24 எசே 34:25 மீகா 5:5 சகரி 6:13 லூக் 1:79 லூக் 2:14 யோவா 16:33 அப் 10:36 ரோம 5:1 கொலோ 1:20 எபிரெ 7:2 எபிரெ 13:20
15பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார்.கொலோ 1:22 எபிரெ 10:19-22
16தூமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.ரோம 5:10 2கொரி 5:18-21 கொலோ 1:21-22
17அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அங்கிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்.சங் 85:10 ஏசா 27:5 ஏசா 52:7 ஏசா 57:19-21 சகரி 9:10 மத் 10:13 லூக் 2:14 லூக் 15:5 லூக் 15:6 அப் 2:39 அப் 10:36 ரோம 5:1 2கொரி 5:20
18அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.எபே 3:12 யோவா 10:7 யோவா 10:9 யோவா 14:6 ரோம 5:2 எபிரெ 4:15 எபிரெ 4:16 எபிரெ 7:19 எபிரெ 10:19 எபிரெ 10:20 1பேது 1:21 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2
19எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல: வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்: கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.எபே 3:6 கலா 3:26-28 கலா 4:26-31 பிலிப் 3:20 எபிரெ 12:22-24 வெளிப் 21:12-26
20திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.எபே 4:12 1பேது 2:4 1பேது 2:5
21கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது.எபே 4:13-16 எசே 40:1-42 1கொரி 3:9 எபிரெ 3:3 எபிரெ 3:4
22நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.யோவா 14:17-23 யோவா 17:21-23 ரோம 8:9-11 1கொரி 3:16 1கொரி 6:19 1பேது 2:4 1பேது 2:5 1யோவா 3:24 1யோவா 4:13 1யோவா 4:16

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.