1கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம்.2கொரி 3:6 2கொரி 3:12 2கொரி 5:18 எபே 3:7 எபே 3:8 2மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை நாங்கள் தவிர்த்து விட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை: மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.1கொரி 4:5 3நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.ரோம 2:16 1தெச 1:5 1தீமோ 1:11 4இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை.மத் 4:8 மத் 4:9 யோவா 12:31 யோவா 12:40 யோவா 14:30 யோவா 16:11 1கொரி 10:20 எபே 2:2 எபே 6:12 1யோவா 5:19 வெளிப் 20:2 வெளிப் 20:3 5நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்: அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.மத் 3:11 யோவா 1:21-23 யோவா 3:27-31 யோவா 7:18 அப் 3:12 அப் 3:13 அப் 8:9 அப் 8:10 அப் 10:25 அப் 10:26 அப் 14:11-15 ரோம 15:17 ரோம 15:18 1கொரி 1:13-15 1கொரி 1:23-15 1கொரி 3:5 1கொரி 3:6 1கொரி 10:33 பிலிப் 1:15 1தெச 2:5 1தெச 2:6 தீத் 1:11 1பேது 5:2-5 2பேது 2:3 6‘இருளிலிருந்து ஒளி தோன்றுக! ‘ என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.ஆதி 1:3 ஆதி 1:14 ஆதி 1:15 சங் 74:16 சங் 136:7-9 ஏசா 45:7 7இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.2கொரி 4:1 2கொரி 6:10 மத் 13:44 மத் 13:52 எபே 3:8 கொலோ 1:27 கொலோ 2:3 8நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை: குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை:2கொரி 1:8-10 2கொரி 6:4 2கொரி 7:5 2கொரி 11:23-30 9துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை: வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.சங் 9:10 சங் 22:1 சங் 37:25 சங் 37:28 ஏசா 62:4 எபிரெ 13:5 10இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.2கொரி 1:5 2கொரி 1:9 ரோம 8:17 ரோம 8:18 கலா 6:17 பிலிப் 3:10 பிலிப் 3:11 கொலோ 1:24 11இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.சங் 44:22 சங் 141:7 ரோம 8:36 1கொரி 15:31 1கொரி 15:49 12சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.2கொரி 12:15 2கொரி 13:9 அப் 20:24 1கொரி 4:10 பிலிப் 2:17 பிலிப் 2:30 1யோவா 3:16 13‘நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்: ஆகவே பேசினேன்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்: ஆகவே பேசுகிறோம்.அப் 15:11 ரோம 1:12 1கொரி 12:9 எபிரெ 11:1-40 2பேது 1:1 14ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்: உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.2கொரி 5:1-4 ஏசா 26:19 யோவா 11:25 யோவா 11:26 ரோம 8:11 1கொரி 6:14 1கொரி 15:20-22 1தெச 4:14 15இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.2கொரி 1:4-6 ரோம 8:28 1கொரி 3:21-23 கொலோ 1:24 2தீமோ 2:10 16எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளருவதில்லை.2கொரி 4:1 சங் 27:13 சங் 119:81 ஏசா 40:29 1கொரி 15:58 17நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.2கொரி 11:23-28 சங் 30:5 ஏசா 54:8 அப் 20:23 ரோம 8:18 ரோம 8:34 ரோம 8:37 1பேது 1:6 1பேது 4:7 1பேது 5:10 18நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை: காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.2கொரி 5:7 ரோம 8:24 ரோம 8:25 எபிரெ 11:1 எபிரெ 11:25-27 எபிரெ 12:2 எபிரெ 12:3