1நான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.2கொரி 1:15-17 அப் 11:29 அப் 15:2 அப் 15:37 1கொரி 2:2 1கொரி 5:3 தீத் 3:12 2நான் உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியூட்ட யார் இருக்கிறார்? என்னால் மனவருத்தத்துக்குட்பட்ட நீங்கள்தானே எனக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்!2கொரி 1:14 2கொரி 11:29 ரோம 12:15 1கொரி 12:26 3நான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தர வேண்டிய உங்களாலே எனக்கு மனவருத்தம் வரக்கூடாது என்பதற்காகவே அத்திருமுகத்தை உங்களுக்கு எழுதினேன். நான் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள். இதுவே உங்கள் அனைவரையும் பற்றிய என் உறுதியான நம்பிக்கை.1கொரி 4:21 1கொரி 5:1-13 4நான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும் கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன். உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்.லேவி 19:17 லேவி 19:18 சங் 119:136 நீதி 27:5 நீதி 27:6 எரே 13:15-17 லூக் 19:41-44 ரோம 9:2 ரோம 9:3 பிலிப் 3:18 5ஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல, ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும். அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை.நீதி 17:25 1கொரி 5:1-5 1கொரி 5:12-5 1கொரி 5:13-5 கலா 5:10 6அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.2கொரி 13:10 1கொரி 5:4 1கொரி 5:5 1தீமோ 5:20 7எனவே இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் நல்லது. அவன் மனவருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறதல் அளியுங்கள்.கலா 6:1 கலா 6:2 எபே 4:32 கொலோ 3:13 2தெச 3:6 2தெச 3:14 2தெச 3:15 எபிரெ 12:12-15 8நீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.கலா 5:13 கலா 6:1 கலா 6:2 கலா 6:10 யூதா 1:22 யூதா 1:23 9நீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே அத்திருமுகத்தை நான் எழுதினேன்.2கொரி 7:12-15 2கொரி 8:24 யாத் 16:4 உபா 8:2 உபா 8:16 உபா 13:3 பிலிப் 2:22 10நீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன்.2கொரி 5:20 மத் 18:18 யோவா 20:23 1கொரி 5:4 11இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல.2கொரி 11:3 2கொரி 11:14 1நாளா 21:1 1நாளா 21:2 யோபு 1:11 யோபு 2:3 யோபு 2:5 யோபு 2:9 சகரி 3:1-4 லூக் 22:31 யோவா 13:2 அப் 1:25 1கொரி 7:5 எபே 6:11 எபே 6:12 2தீமோ 2:25 1பேது 5:8 வெளிப் 2:24 வெளிப் 12:9-11 வெளிப் 13:8 12துரோவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழுது அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார்.அப் 16:8 அப் 20:1-6 அப் 20:8-6 13ஆனால் அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே அம்மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன்.2கொரி 7:5 2கொரி 7:6 14கிறிஸ்துவோடு இணைந்து வாழும் எங்களைக் கடவுள் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்கு கொள்ளச் செய்து எங்கள் வழியாய்த் தம்மைப்பற்றி யாவரும் அறியச் செய்கிறார்: இவ்வறிவு நறுமணம் போல் எங்கும் பரவுகிறது. இவ்வாறு செய்யும் கடவுளுக்கே நன்றி உரித்தாகுக!2கொரி 1:11 2கொரி 8:16 2கொரி 9:15 எபே 5:20 1தெச 3:9 வெளிப் 7:12 15மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.ஆதி 8:21 யாத் 29:18 யாத் 29:25 எசே 20:41 எபே 5:2 பிலிப் 4:18 16அழிவுறுவோருக்கு அது சாவை விளைவிக்கும் நச்சுப் புகையாகும். மீட்புப் பெறுவோருக்கு அது வாழ்வளிக்கும் நறுமணமாகும். அப்படியெனில் இத்தகைய பணியை யார்தான் செய்ய இயலும்?லூக் 2:34 யோவா 9:39 அப் 13:45-47 அப் 20:26 அப் 20:27 1பேது 2:7 1பேது 2:8 17நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்.2கொரி 4:2 2கொரி 11:13-15 எரே 5:31 எரே 23:27-32 மத் 24:24 1தீமோ 1:19 1தீமோ 1:20 1தீமோ 4:1-3 2தீமோ 2:6-18 2தீமோ 4:3 2தீமோ 4:4 தீத் 1:11 2பேது 2:1-3 1யோவா 4:1 2யோவா 1:7-11 யூதா 1:4 வெளிப் 2:14 வெளிப் 2:15 வெளிப் 2:20 வெளிப் 12:9 வெளிப் 19:20