இணை வசன வேதாகமம்

2தீமோத்தேயு 1

                   
புத்தகங்களைக் காட்டு
1என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:ரோம 1:1 2கொரி 1:1
2தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!1தீமோ 1:2 ரோம 12:19 பிலிப் 4:1
3என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூறுகின்றேன்.ரோம 1:8 எபே 1:16
4உன் கண்ணீரை நினைவிற் கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்: கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்.2தீமோ 4:9 2தீமோ 4:21 ரோம 1:11 ரோம 15:30-32 பிலிப் 1:8 பிலிப் 2:26 1தெச 2:17-20 1தெச 3:1
5வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டிலோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.சங் 77:6
6உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.2தீமோ 2:14 ஏசா 43:26 1தீமோ 4:6 2பேது 1:12 2பேது 3:1 யூதா 1:5
7கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.அப் 20:24 அப் 21:13 ரோம 8:15 எபிரெ 2:15 1யோவா 4:18
8எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை: கடவுளின் வல்லமை;கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.2தீமோ 1:12 சங் 119:46 ஏசா 51:7 மாற் 8:38 லூக் 9:26 அப் 5:41 ரோம 1:16 ரோம 9:33 எபே 3:13 1பேது 4:14
9அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்: நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார்.மத் 1:21 அப் 2:47 1கொரி 1:18 எபே 2:5 எபே 2:8 1தீமோ 1:1 தீத் 3:4 தீத் 3:5
10நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.ஏசா 25:7 ஏசா 60:2 ஏசா 60:3 லூக் 2:31 லூக் 2:32 ரோம 16:26 எபே 1:9 கொலோ 1:26 கொலோ 1:27 தீத் 1:3 தீத் 2:11 1பேது 1:20 1பேது 1:21 1யோவா 1:2
11அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன்.அப் 9:15 எபே 3:7 எபே 3:8 1தீமோ 1:7 1தீமோ 2:7
12இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்: எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.2தீமோ 1:8 2தீமோ 2:9 2தீமோ 3:10-12 2தீமோ 4:16 2தீமோ 4:17 அப் 9:16 அப் 13:46 அப் 13:50 அப் 14:5 அப் 14:6 அப் 21:27-31 அப் 22:21-24 எபே 3:1-8 1தெச 2:16
13கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள்.2தீமோ 1:14 2தீமோ 3:14 நீதி 3:18 நீதி 3:21 நீதி 4:4-8 நீதி 4:13-8 நீதி 23:23 பிலிப் 1:27 1தெச 5:21 தீத் 1:9 எபிரெ 3:6 எபிரெ 4:14 எபிரெ 10:23 யூதா 1:3 வெளிப் 2:25 வெளிப் 3:3 வெளிப் 3:11
14நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்.2தீமோ 2:2 லூக் 16:11 ரோம 3:2 1கொரி 9:17 2கொரி 5:19 2கொரி 5:20 கலா 2:7 கொலோ 4:11 1தீமோ 1:11 1தீமோ 6:20
15பிகல், எர்மொகேன் உட்பட ஆசியாவிலுள்ள அனைவரும் என்னிடமிருந்து விலகிவிட்டனர் என்பதை நீ அறிந்திருக்கிறாய்.அப் 16:6 அப் 19:10 அப் 19:27 அப் 19:31 அப் 20:16 1கொரி 16:19
16ஒனேசிப்போரின் வீட்டாருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக! ஏனெனில் அவர் பன்முறை என் உளம் குளிரப் பண்ணினார். விலங்கிடப்பட்டிருக்கும் என்னைக் குறித்து அவர் வெட்கமடையவில்லை.2தீமோ 1:18 நெகே 5:19 நெகே 13:14 நெகே 13:22 நெகே 13:31 சங் 18:25 சங் 37:26 மத் 5:7 மத் 10:41 மத் 10:42 மத் 25:35-40 2கொரி 9:12-14 எபிரெ 6:10 எபிரெ 10:34
17அவர் உரோமைக்கு வந்தபோது ஆர்வமாக என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்.அப் 28:30 அப் 28:31
18இறுதி நாளில் ஆண்டவரிடம் இரக்கத்தைக் கண்டுகொள்ள அவருக்கு ஆண்டவர் அருள்வாராக! எபேசில் அவர் எவ்வாறு தொண்டாற்றினார் என்பதை நீ நன்கு அறிவாய்.2தீமோ 1:16 1இரா 17:20 மத் 25:34-40

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.