21
அவர் என்னை நோக்கி, “புறப்படு! தொலையிலுள்ள பிற இனத்தவரிடம் நான், உன்னை அனுப்புகிறேன்” என்றார்.”
22
இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இவனை அடியொடு ஒழியுங்கள்: இவன் வாழத் தகுதியற்றவன்” என்று கத்தினார்.
23
இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டே தங்கள் மேலுடைகளை வீசி எறிந்து, புழதி வாரி இறைத்தார்கள்.
24
மக்கள் இவ்வாறு கூச்சலிடுவதின் காரணத்தை ஆயிரத்தவர் தலைவர் அறிய விரும்பி அவரைக் கோட்டைக்குள் அழைத்துச் சாட்டைகளால் அடித்து விசாரணை டசெய்ய ஆணை பிறப்பித்தார்.