1 | ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். | நீதி 16:1 நீதி 16:9 நீதி 20:24 எஸ்றா 7:27 எஸ்றா 7:28 நெகே 1:11 நெகே 2:4 சங் 105:25 சங் 106:46 தானி 4:35 அப் 7:10 |
2 | மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார். | நீதி 16:2 நீதி 16:25 நீதி 20:6 நீதி 30:12 சங் 36:2 லூக் 18:11 லூக் 18:12 கலா 6:3 யாக் 1:22 |
3 | பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். | நீதி 15:8 1சாமு 15:22 சங் 50:8 ஏசா 1:11-17 எரே 7:21-23 ஓசி 6:6 மீகா 6:6-8 மாற் 12:33 |
4 | மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே. | நீதி 6:17 நீதி 8:13 நீதி 30:13 சங் 10:4 ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 3:16 லூக் 18:14 1பேது 5:5 |
5 | ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும். | நீதி 10:4 நீதி 13:4 நீதி 27:23-27 எபே 4:28 1தெச 4:11 1தெச 4:12 |
6 | பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும். | நீதி 10:2 நீதி 13:11 நீதி 20:14 நீதி 20:21 நீதி 22:8 நீதி 30:8 எரே 17:11 1தீமோ 6:9 1தீமோ 6:10 தீத் 1:11 2பேது 2:3 |
7 | துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள். | நீதி 1:18 நீதி 1:19 நீதி 10:6 நீதி 22:22 நீதி 22:23 சங் 7:16 சங் 9:16 ஏசா 1:23 ஏசா 1:24 எரே 7:9-11 எரே 7:15-11 எசே 22:13 எசே 22:14 மீகா 3:9-12 |
8 | குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன். | ஆதி 6:5 ஆதி 6:6 ஆதி 6:12 யோபு 15:14-16 சங் 14:2 சங் 14:3 பிரச 7:29 பிரச 9:3 1கொரி 3:3 எபே 2:2 எபே 2:3 தீத் 3:3 |
9 | சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். | நீதி 21:19 நீதி 12:4 நீதி 19:13 நீதி 25:24 நீதி 27:15 நீதி 27:16 |
10 | துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது. | நீதி 3:29 நீதி 12:12 சங் 36:4 சங் 52:2 சங் 52:3 மாற் 7:21 மாற் 7:22 1கொரி 10:6 யாக் 4:1-5 1யோவா 2:16 |
11 | பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். | நீதி 19:25 எண் 16:34 உபா 13:11 உபா 21:21 சங் 64:7-9 அப் 5:5 அப் 5:11-14 1கொரி 10:6-11 எபிரெ 2:1-3 எபிரெ 10:28 எபிரெ 10:29 வெளிப் 11:13 |
12 | நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். | யோபு 5:3 யோபு 8:15 யோபு 18:14-21 யோபு 21:28-30 யோபு 27:13-23 சங் 37:35 சங் 37:36 சங் 52:5 சங் 107:43 ஓசி 14:9 ஆபகூ 2:9-12 |
13 | ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். | சங் 58:4 சகரி 7:11 அப் 7:57 |
14 | அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும். | நீதி 17:8 நீதி 17:23 நீதி 18:16 நீதி 19:6 ஆதி 32:20 ஆதி 43:11 1சாமு 25:35 |
15 | நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம். | யோபு 29:12-17 சங் 40:8 சங் 112:1 சங் 119:16 சங் 119:92 பிரச 3:12 ஏசா 64:5 யோவா 4:34 ரோம 7:22 |
16 | விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான். | நீதி 13:20 சங் 125:5 செப் 1:6 யோவா 3:19 யோவா 3:20 எபிரெ 6:4-6 எபிரெ 10:26 எபிரெ 10:27 எபிரெ 10:38 2பேது 2:21 2பேது 2:22 1யோவா 2:19 |
17 | சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை. | நீதி 21:20 நீதி 5:10 நீதி 5:11 நீதி 23:21 லூக் 15:13-16 லூக் 16:24 லூக் 16:25 1தீமோ 5:6 2தீமோ 3:4 |
18 | நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். | நீதி 11:8 ஏசா 43:3 ஏசா 43:4 ஏசா 53:4 ஏசா 53:5 ஏசா 55:8 ஏசா 55:9 1பேது 3:18 |
19 | சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். | நீதி 21:9 சங் 55:6 சங் 55:7 சங் 120:5 சங் 120:6 எரே 9:2 |
20 | வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். | நீதி 10:22 நீதி 15:6 சங் 112:3 பிரச 5:19 பிரச 7:11 பிரச 10:19 மத் 6:19 மத் 6:20 லூக் 6:45 |
21 | நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். | நீதி 15:9 ஏசா 51:1 ஓசி 6:3 மத் 5:6 ரோம 14:19 பிலிப் 3:12 1தெச 5:21 1தீமோ 6:11 2தீமோ 2:22 எபிரெ 12:14 |
22 | பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான். | 2சாமு 20:16-22 பிரச 7:19 பிரச 9:13-18 |
23 | தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். | நீதி 10:19 நீதி 12:13 நீதி 13:3 நீதி 17:27 நீதி 17:28 நீதி 18:21 யாக் 1:26 யாக் 3:2-13 |
24 | அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான். | நீதி 6:17 நீதி 16:18 நீதி 18:12 நீதி 19:29 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 பிரச 7:8 பிரச 7:9 மத் 2:16 |
25 | சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும். | நீதி 6:6-11 நீதி 12:24 நீதி 12:27 நீதி 13:4 நீதி 15:19 நீதி 19:24 நீதி 20:4 நீதி 22:13 நீதி 24:30-34 நீதி 26:13 நீதி 26:16 மத் 25:26 |
26 | அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான். | அப் 20:33-35 1தெச 2:5-9 |
27 | துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும். | நீதி 15:8 நீதி 28:9 1சாமு 13:12 1சாமு 13:13 1சாமு 15:21-23 சங் 50:8-13 ஏசா 1:11-16 ஏசா 66:3 எரே 6:20 எரே 7:11 எரே 7:12 ஆமோ 5:21 ஆமோ 5:22 |
28 | பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான். | நீதி 6:19 நீதி 19:5 நீதி 19:9 நீதி 25:18 யாத் 23:1 உபா 19:16-19 |
29 | துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான். | நீதி 28:14 நீதி 29:1 எரே 3:2 எரே 3:3 எரே 5:3 எரே 8:12 எரே 44:16 எரே 44:17 |
30 | கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை. | நீதி 19:21 ஏசா 7:5-7 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 14:27 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 9:23 யோனா 1:13 அப் 4:27 அப் 4:28 அப் 5:39 1பேது 2:8 |
31 | குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். | சங் 20:7 சங் 33:17 சங் 33:18 சங் 147:10 பிரச 9:11 ஏசா 31:1 |