1 | தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: | நீதி 10:1 நீதி 25:1 1இரா 4:31 1இரா 4:32 பிரச 12:9 யோவா 16:25 |
2 | இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, | நீதி 4:5-7 நீதி 7:4 நீதி 8:5 நீதி 16:16 நீதி 17:16 உபா 4:5 உபா 4:6 1இரா 3:9-12 2தீமோ 3:15-17 |
3 | விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். | நீதி 2:1-9 நீதி 8:10 நீதி 8:11 யோபு 22:22 |
4 | இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். | நீதி 1:22 நீதி 1:23 நீதி 8:5 நீதி 9:4-6 சங் 19:7 சங் 119:130 ஏசா 35:8 |
5 | புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; | நீதி 9:9 நீதி 12:1 யோபு 34:10 யோபு 34:16 யோபு 34:34 சங் 119:98-100 1கொரி 10:15 |
6 | நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். | மத் 13:10-17 மத் 13:51-17 மத் 13:52-17 மாற் 4:11 மாற் 4:34 அப் 8:30 அப் 8:31 |
7 | கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள். | நீதி 9:10 யோபு 28:28 சங் 111:10 சங் 112:1 பிரச 12:13 |
8 | என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. | நீதி 1:10 நீதி 1:15 நீதி 2:1 நீதி 3:1 நீதி 7:1 மத் 9:2 மத் 9:22 |
9 | அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். | நீதி 3:22 நீதி 4:9 நீதி 6:20 நீதி 6:21 1தீமோ 2:9 1தீமோ 2:10 1பேது 3:3 1பேது 3:4 |
10 | என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. | நீதி 7:21-23 நீதி 13:20 நீதி 20:19 ஆதி 39:7-13 நியா 16:16-21 சங் 1:1 சங் 50:18 ரோம 16:18 எபே 5:11 |
11 | எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; | நீதி 1:16 நீதி 12:6 நீதி 30:14 சங் 56:6 சங் 64:5 சங் 64:6 எரே 5:26 மீகா 7:2 அப் 23:15 அப் 25:3 |
12 | பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; | சங் 35:25 சங் 56:1 சங் 56:2 சங் 57:3 சங் 124:3 எரே 51:34 புலம் 2:5 புலம் 2:16 மீகா 3:2 மீகா 3:3 |
13 | விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். | நீதி 1:19 யோபு 24:2 யோபு 24:3 ஏசா 10:13 ஏசா 10:14 எரே 22:16 எரே 22:17 நாகூ 2:12 ஆகா 2:9 லூக் 12:15 1தீமோ 6:9 1தீமோ 6:10 வெளிப் 18:9-16 |
14 | எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்; |
15 | என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. | நீதி 4:14 நீதி 4:15 நீதி 9:6 நீதி 13:20 சங் 1:1 சங் 26:4 சங் 26:5 2கொரி 6:17 |
16 | அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது. | நீதி 4:16 நீதி 6:18 ஏசா 59:7 ரோம 3:5 |
17 | எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. | நீதி 7:23 யோபு 35:11 ஏசா 1:3 எரே 8:7 |
18 | இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள். | நீதி 5:22 நீதி 5:23 நீதி 9:17 நீதி 9:18 நீதி 28:17 எஸ்தர் 7:10 சங் 7:14-16 சங் 9:16 சங் 55:23 மத் 27:4 மத் 27:5 |
19 | பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். | நீதி 15:27 நீதி 23:3 நீதி 23:4 2சாமு 18:11-13 2இரா 5:20-27 எரே 22:17-19 மீகா 2:1-3 மீகா 3:10-12 ஆபகூ 2:9 அப் 8:19 அப் 8:20 1தீமோ 3:3 1தீமோ 6:9 1தீமோ 6:10 யாக் 5:1-4 2பேது 2:3 2பேது 2:14-16 |
20 | ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. | மத் 13:54 லூக் 11:49 1கொரி 1:24 1கொரி 1:30 கொலோ 2:3 |
21 | அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது: | நீதி 9:3 மத் 10:27 மத் 13:2 யோவா 18:20 அப் 5:20 |
22 | பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். | நீதி 6:9 யாத் 10:3 யாத் 16:28 எண் 14:27 மத் 17:17 |
23 | என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். | ஏசா 55:1-3 ஏசா 55:6-3 ஏசா 55:7-3 எரே 3:14 எசே 18:27-30 எசே 33:11 ஓசி 14:1 அப் 3:19 அப் 26:20 |
24 | நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. | ஏசா 50:2 ஏசா 65:12 ஏசா 66:4 எரே 7:13 எசே 8:18 சகரி 7:11 சகரி 7:12 மத் 22:5 மத் 22:6 மத் 23:37 மத் 23:38 எபிரெ 12:25 எபிரெ 12:26 |
25 | என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். | நீதி 1:30 2நாளா 36:16 சங் 107:11 லூக் 7:30 |
26 | ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். | நியா 10:14 சங் 2:4 சங் 37:13 லூக் 14:24 |
27 | நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். | நீதி 3:25 நீதி 3:26 நீதி 10:24 நீதி 10:25 சங் 69:22-28 லூக் 21:26 லூக் 21:34 லூக் 21:35 1தெச 5:3 வெளிப் 6:15-17 |
28 | அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். | ஆதி 6:3 யோபு 27:9 யோபு 35:12 சங் 18:41 ஏசா 1:15 எரே 11:11 எரே 14:12 எசே 8:18 மீகா 3:4 சகரி 7:13 மத் 7:22 மத் 7:23 மத் 25:10-12 லூக் 13:25-28 யாக் 4:3 |
29 | அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். | நீதி 1:22 நீதி 5:12 நீதி 6:23 யோபு 21:14 யோபு 21:15 சங் 50:16 சங் 50:17 ஏசா 27:11 ஏசா 30:9-12 யோவா 3:20 அப் 7:51-54 |
30 | என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள். | நீதி 1:25 சங் 81:11 சங் 119:111 சங் 119:173 எரே 8:9 லூக் 14:18-20 |
31 | ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். | நீதி 14:14 நீதி 22:8 யோபு 4:8 ஏசா 3:10 ஏசா 3:11 எரே 2:19 எரே 6:19 கலா 6:7 கலா 6:8 |
32 | பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்; | நீதி 8:36 யோவா 3:36 எபிரெ 10:38 எபிரெ 10:39 எபிரெ 12:25 |
33 | எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். | நீதி 8:32-35 நீதி 9:11 சங் 25:12 சங் 25:13 சங் 81:13 ஏசா 48:18 ஏசா 55:3 மத் 17:5 யோவா 10:27-29 1பேது 1:5 |