இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.ஆதி 3:13-15 ஏசா 27:1 மத் 10:16 2கொரி 11:3 2கொரி 11:14 வெளிப் 12:9 வெளிப் 20:2
2ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;சங் 58:4
3ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.ஆதி 2:16 ஆதி 2:17
4அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;யோவா 8:44
5நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.யாத் 20:7 1இரா 22:6 எரே 14:13 எரே 14:14 எரே 28:2 எரே 28:3 எசே 13:2-6 எசே 13:22-6 2கொரி 11:3 2கொரி 11:13-15
6அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.யோசு 7:21 நியா 16:1 நியா 16:2
7அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.ஆதி 3:5 உபா 28:34 2இரா 6:20 லூக் 16:23
8பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.ஆதி 3:10 உபா 4:33 உபா 5:25
9அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.ஆதி 4:9 ஆதி 11:5 ஆதி 16:8 ஆதி 18:20 ஆதி 18:21 யோசு 7:17-19 வெளிப் 20:12 வெளிப் 20:13
10அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.ஆதி 2:25 யாத் 3:6 யோபு 23:15 சங் 119:120 ஏசா 33:14 ஏசா 57:11 1யோவா 3:20
11அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.ஆதி 4:10 சங் 50:21 ரோம 3:20
12அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.ஆதி 2:18 ஆதி 2:20 ஆதி 2:22 யாத் 32:21-24 1சாமு 15:20-24 யோபு 31:33 நீதி 19:3 நீதி 28:13 லூக் 10:29 ரோம 10:3 யாக் 1:13-15
13அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.ஆதி 4:10-12 ஆதி 44:15 1சாமு 13:11 2சாமு 3:24 2சாமு 12:9-12 யோவா 18:35
14அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;ஆதி 3:1 ஆதி 9:6 யாத் 21:28-32 லேவி 20:25
15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.எண் 21:6 எண் 21:7 ஆமோ 9:3 மாற் 16:18 லூக் 10:19 அப் 28:3-6 ரோம 3:13
16அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.ஆதி 35:16-18 1சாமு 4:19-21 சங் 48:6 ஏசா 13:8 ஏசா 21:3 ஏசா 26:17 ஏசா 26:18 ஏசா 53:11 எரே 4:31 எரே 6:24 எரே 13:21 எரே 22:23 எரே 49:24 மீகா 4:9 மீகா 4:10 யோவா 16:21 1தெச 5:3 1தீமோ 2:15
17பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.1சாமு 15:23 1சாமு 15:24 மத் 22:12 மத் 25:26 மத் 25:27 மத் 25:45 லூக் 19:22 ரோம 3:19
18அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.யோசு 23:13 யோபு 5:5 யோபு 31:40 நீதி 22:5 நீதி 24:31 ஏசா 5:6 ஏசா 7:23 ஏசா 32:13 எரே 4:3 எரே 12:13 மத் 13:7 எபிரெ 6:8
19நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.பிரச 1:3 பிரச 1:13 எபே 4:28 1தெச 2:9 2தெச 3:10
20ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.ஆதி 2:20 ஆதி 2:23 ஆதி 5:29 ஆதி 16:11 ஆதி 29:32-35 ஆதி 35:18 யாத் 2:10 1சாமு 1:20 மத் 1:21 மத் 1:23
21தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.ஆதி 3:7 ஏசா 61:10 ரோம 3:22 2கொரி 5:2 2கொரி 5:3 2கொரி 5:21
22பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,ஆதி 3:5 ஆதி 1:26 ஆதி 11:6 ஆதி 11:7 ஏசா 19:12 ஏசா 19:13 ஏசா 47:12 ஏசா 47:13 எரே 22:23
23அவன் எடுக்கப்பட்ட மண்ணைப்பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.ஆதி 3:19 ஆதி 2:5 ஆதி 4:2 ஆதி 4:12 ஆதி 9:20 பிரச 5:9
24அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.ஆதி 2:8

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.