இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.ஆதி 2:4 ஆதி 1:1 ஆதி 1:10 யாத் 20:11 யாத் 31:17 2இரா 19:15 2நாளா 2:12 நெகே 9:6 யோபு 12:9 சங் 89:11-13 சங் 104:2 சங் 136:5-8 சங் 146:6 ஏசா 42:5 ஏசா 45:18 ஏசா 48:13 ஏசா 55:9 ஏசா 65:17 எரே 10:12 எரே 10:16 சகரி 12:1 அப் 4:24 எபிரெ 4:3
2தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.ஆதி 1:31 யாத் 20:11 யாத் 23:12 யாத் 31:17 உபா 5:14 ஏசா 58:13 யோவா 5:17 எபிரெ 4:4
3தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.யாத் 16:22-30 யாத் 20:8-11 யாத் 23:12 யாத் 31:13-17 யாத் 34:21 யாத் 35:2 யாத் 35:3 லேவி 23:3 லேவி 25:2 லேவி 25:3 உபா 5:12-14 நெகே 9:14 நெகே 13:15-22 நீதி 10:22 ஏசா 56:2-7 ஏசா 58:13 ஏசா 58:14 எரே 17:21-27 எசே 20:12 மாற் 2:27 லூக் 23:56 எபிரெ 4:4-10
4தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.ஆதி 1:4 ஆதி 5:1 ஆதி 10:1 ஆதி 11:10 ஆதி 25:12 ஆதி 25:19 ஆதி 36:1 ஆதி 36:9 யாத் 6:16 யோபு 38:28 சங் 90:1 சங் 90:2
5நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.ஆதி 1:12 சங் 104:14
6அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
7தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.சங் 100:3 சங் 139:14 சங் 139:15 ஏசா 64:8
8தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.ஆதி 13:10 எசே 28:13 எசே 31:8 எசே 31:9 யோவே 2:3
9தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.எசே 31:8 எசே 31:9 எசே 31:16 எசே 31:18
10தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.சங் 46:4 வெளிப் 22:1
11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.ஆதி 10:7 ஆதி 10:29 ஆதி 25:18 1சாமு 15:7
12அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.எண் 11:7
13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.ஆதி 10:6 ஏசா 11:11
14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.தானி 10:4
15தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.ஆதி 2:2 யோபு 31:33
16தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.1சாமு 15:22
17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.ஆதி 2:9 ஆதி 3:1-3 ஆதி 3:11-3 ஆதி 3:17-3 ஆதி 3:19-3
18பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.ஆதி 1:31 ஆதி 3:12 ரூத் 3:1 நீதி 18:22 பிரச 4:9-12 1கொரி 7:36
19தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.ஆதி 1:20-25
20அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
21அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.ஆதி 15:12 1சாமு 26:12 யோபு 4:13 யோபு 33:15 நீதி 19:15 தானி 8:18
22தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.சங் 127:1 1தீமோ 2:13
23அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.ஆதி 29:14 நியா 9:2 2சாமு 5:1 2சாமு 19:13 எபே 5:30
24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.ஆதி 24:58 ஆதி 24:59 ஆதி 31:14 ஆதி 31:15 சங் 45:10
25ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.ஆதி 3:7 ஆதி 3:10 ஆதி 3:11

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.