இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.எண் 31:17
2பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.ஆதி 30:29-31 ஆதி 37:13 ஆதி 46:32-34 ஆதி 47:3 யாத் 3:1 சங் 78:70-72 ஆமோ 7:15
3சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.1இரா 17:7 நெகே 13:6
4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.யாத் 13:12 எண் 18:12 எண் 18:17 நீதி 3:9 எபிரெ 9:22 1பேது 1:19 1பேது 1:20 வெளிப் 13:8
5காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.எண் 16:15 எபிரெ 11:4
6அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?1நாளா 13:11-13 யோபு 5:2 ஏசா 1:18 எரே 2:5 எரே 2:31 யோவா 4:1-4 யோவா 4:8-11 மீகா 6:3-5 மத் 20:15 லூக் 15:31 லூக் 15:32
7நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.ஆதி 19:21 2சாமு 24:23 2இரா 8:28 யோபு 42:8 நீதி 18:5 பிரச 8:12 பிரச 8:13 ஏசா 3:10 ஏசா 3:11 எரே 6:20 மல்கி 1:8 மல்கி 1:10 மல்கி 1:13 அப் 10:35 ரோம 2:7-10 ரோம 12:1 ரோம 14:18 ரோம 15:16 எபே 1:6 1தீமோ 5:4 1பேது 2:5
8காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.2சாமு 3:27 2சாமு 13:26-28 2சாமு 20:9 2சாமு 20:10 நெகே 6:2 சங் 36:3 சங் 55:21 நீதி 26:24-26 மீகா 7:6 லூக் 22:48
9கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.ஆதி 3:9-11 சங் 9:12
10அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.ஆதி 3:13 யோசு 7:19 சங் 50:21
11இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.ஆதி 4:14 ஆதி 3:14 உபா 27:16-26 உபா 28:15-20 உபா 29:19-21 கலா 3:10
12நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.ஆதி 3:17 ஆதி 3:18 லேவி 26:20 உபா 28:23 உபா 28:24 ரோம 8:20
13அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.யோபு 15:22 வெளிப் 16:9 வெளிப் 16:11 வெளிப் 16:21
14இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.யோபு 15:20-24 நீதி 14:32 நீதி 28:1 ஏசா 8:22 ஓசி 13:3
15அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.1இரா 16:7 சங் 59:11 ஓசி 1:4 மத் 26:52
16அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.ஆதி 4:14 ஆதி 3:8 யாத் 20:18 2இரா 13:23 2இரா 24:20 யோபு 1:12 யோபு 2:7 யோபு 20:17 சங் 5:11 சங் 68:2 எரே 23:39 எரே 52:3 யோவா 1:3 யோவா 1:10 மத் 18:20 லூக் 13:26 1தெச 1:9
17காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.ஆதி 5:18 ஆதி 5:22
18ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.ஆதி 5:21 ஆதி 36:2
19லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.ஆதி 2:18 ஆதி 2:24 மத் 19:4-6 மத் 19:8-6
20ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.ஆதி 4:21 1நாளா 2:50-52 1நாளா 4:4 1நாளா 4:5 யோவா 8:44 ரோம 4:11 ரோம 4:12
21அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.ரோம 4:11 ரோம 4:12
22சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.யாத் 25:3 எண் 31:22 உபா 8:9 உபா 33:25 2நாளா 2:7
23லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;எண் 23:18 நியா 9:7 நியா 49:6
24காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.மத் 18:22
25பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்.ஆதி 5:3 ஆதி 5:4 1நாளா 1:1 லூக் 3:38
26சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.உபா 26:17 உபா 26:18 1இரா 18:24 சங் 116:17 ஏசா 44:5 ஏசா 48:1 ஏசா 63:19 எரே 33:16 யோவே 2:32 செப் 3:9 அப் 2:21 அப் 11:26 ரோம 10:13 1கொரி 1:2 எபே 3:14 எபே 3:15

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.