இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.நீதி 8:22-24 நீதி 16:4 மாற் 13:19 யோவா 1:1-3 எபிரெ 1:10 1யோவா 1:1
2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.யோபு 26:7 ஏசா 45:18 எரே 4:23 நாகூ 2:10
3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.சங் 33:6 சங் 33:9 சங் 148:5 மத் 8:3 யோவா 11:43
4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.ஆதி 1:10 ஆதி 1:12 ஆதி 1:18 ஆதி 1:25 ஆதி 1:31 பிரச 2:13 பிரச 11:7
5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.ஆதி 8:22 சங் 19:2 சங் 74:16 சங் 104:20 ஏசா 45:7 எரே 33:20 1கொரி 3:13 எபே 5:13 1தெச 5:5
6பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.ஆதி 1:14 ஆதி 1:20 ஆதி 7:11 ஆதி 7:12 யோபு 26:7 யோபு 26:8 யோபு 26:13 யோபு 37:11 யோபு 37:18 யோபு 38:22-26 சங் 19:1 சங் 33:6 சங் 33:9 சங் 104:2 சங் 136:5 சங் 136:6 சங் 148:4 சங் 150:1 பிரச 11:3 எரே 10:10 எரே 10:12 எரே 10:13 எரே 51:15 சகரி 12:1
7தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.நீதி 8:28 நீதி 8:29
8தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று.ஆதி 1:5 ஆதி 1:10 ஆதி 5:2
9பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.யோபு 26:7 யோபு 26:10 யோபு 38:8-11 சங் 24:1 சங் 24:2 சங் 33:7 சங் 95:5 சங் 104:3 சங் 104:5-9 சங் 136:5 சங் 136:6 நீதி 8:28 நீதி 8:29 பிரச 1:7 எரே 5:22 யோனா 1:9 2பேது 3:5 வெளிப் 10:6
10தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.ஆதி 1:4 உபா 32:4 சங் 104:31
11அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.ஆதி 2:5 யோபு 28:5 சங் 104:14-17 சங் 147:8 மத் 6:30 எபிரெ 6:7
12பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.ஏசா 61:11 மாற் 4:28
13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
14பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.உபா 4:19 யோபு 25:3 யோபு 25:5 யோபு 38:12-14 சங் 8:3 சங் 8:4 சங் 19:1-6 சங் 74:16 சங் 74:17 சங் 104:19 சங் 104:20 சங் 119:91 சங் 136:7-9 சங் 148:3 சங் 148:6 ஏசா 40:26 எரே 31:35 எரே 33:20 எரே 33:25
15அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.உபா 4:19 யோசு 10:12-14 யோபு 31:26 யோபு 38:7 சங் 8:3 சங் 19:6 சங் 74:16 சங் 136:7 சங் 136:8 சங் 136:9 சங் 148:3 சங் 148:5 ஏசா 13:10 ஏசா 24:23 ஏசா 45:7 ஆபகூ 3:11 மத் 24:29 மத் 27:45 1கொரி 15:41 வெளிப் 16:8 வெளிப் 16:9 வெளிப் 21:23
17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,ஆதி 9:13 யோபு 38:12 சங் 8:1 சங் 8:3 அப் 13:47
18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.சங் 19:6 எரே 31:35
19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
20பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.ஆதி 1:22 ஆதி 2:19 ஆதி 8:17 சங் 104:24 சங் 104:25 சங் 148:10 அப் 17:25
21தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.ஆதி 6:20 ஆதி 7:14 ஆதி 8:19 யோபு 7:12 யோபு 26:5 சங் 104:24-26 எசே 32:2 யோனா 1:17 யோனா 2:10 மத் 12:40
22தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.ஆதி 1:28 ஆதி 8:17 ஆதி 9:1 ஆதி 30:27 ஆதி 30:30 ஆதி 35:11 லேவி 26:9 யோபு 40:15 யோபு 42:12 சங் 107:31 சங் 107:38 சங் 128:3 சங் 144:13 சங் 144:14 நீதி 10:22
23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
24பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.ஆதி 6:20 ஆதி 7:14 ஆதி 8:19 யோபு 38:39 யோபு 38:40 யோபு 39:1 யோபு 39:5 யோபு 39:9 யோபு 39:19 யோபு 40:15 சங் 50:9 சங் 50:10 சங் 104:18 சங் 104:23 சங் 148:10
25தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.ஆதி 2:19 ஆதி 2:20 யோபு 12:8-10 யோபு 26:13
26பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.ஆதி 3:22 ஆதி 11:7 யோபு 35:10 சங் 100:3 சங் 149:2 ஏசா 64:8 யோவா 5:17 யோவா 14:23 1யோவா 5:7
27தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.சங் 139:14 ஏசா 43:7 எபே 2:10 எபே 4:24 கொலோ 1:15 கொலோ 1:26
28பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.ஆதி 1:22 ஆதி 8:17 ஆதி 9:1 ஆதி 9:7 ஆதி 17:16 ஆதி 17:20 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 24:60 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 26:24 ஆதி 33:5 ஆதி 49:25 லேவி 26:9 1நாளா 4:10 1நாளா 26:5 யோபு 42:12 சங் 107:38 சங் 127:1-5 சங் 128:3 சங் 128:4 ஏசா 45:18 1தீமோ 4:3
29பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;சங் 24:1 சங் 115:16 ஓசி 2:8 அப் 17:24 அப் 17:25 அப் 17:28 1தீமோ 6:17
30பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.ஆதி 9:3 யோபு 38:39-41 யோபு 39:4 யோபு 39:8 யோபு 39:30 யோபு 40:15 யோபு 40:20 சங் 104:14 சங் 145:15 சங் 145:16 சங் 147:9
31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.யோபு 38:7 சங் 19:1 சங் 19:2 சங் 104:24 சங் 104:31 புலம் 3:38 1தீமோ 4:4

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.