கட்டுரைகள்

 

 WhatsApp Image 2025 02 17 at 20.02.41 c2541b1d

ஆசிரியர்: ஜோனதன் எட்வர்ட்ஸ் (1703-1758)

தமிழாக்கம்: மேஷாக்

"சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல். அநியாயத்திறகுக் கீழ்பப்டிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்." (ரோமர்2:8-9)

நியாயத்தீர்ப்பு நாள் வரும்போது, (துன்மார்க்கர்) சாபத்திற்குரிய உயிர்த்தெழுதலுக்கு எழுந்திருப்பார்கள். அந்த நாள் வரும்போது. பூமியின் முகத்திலிருந்து மரித்த அனைத்து மனிதகுலமும் எழுந்திருப்பார்கள் நீதிமான்கள் மட்டுமல்ல, துன்மார்க்கரும் கூட "பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்" (தானியேல் 12:2). "சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது: மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்." (வெளிப்படுத்துதல் 20:13). நியாயத்தீர்ப்பு நாள் எப்போது வரும் என்று நரகத்தில் சபிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாது; ஆனால் நேரம் வரும்போது, அது தெரியப்படுத்தப்படும். அந்த துயர உலகில் இதுவரை சொல்லப்பட்டதிலேயே மிகவும் பயங்கரமான செய்தியாக அது இருக்கும். நரகத்தில் அது எப்போதும் ஒரு துயரமான நேரம். இருள் உலகம் எப்போதும் அலறல்களாலும், துயரமான அழுகைகளாலும் நிறைந்திருக்கும். ஆனால் நியாயத்தீர்ப்புக்காக நியமிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது, நரகம் முன்பை விட அதிக அலறல்களாலும், பயங்கரமான அழுகைகளாலும் நிரப்பப்படும்.

கிறிஸ்து நியாயத்தீர்ப்புக்காக வானத்தின் மேகங்களில் வரும்போது, அதைப் பற்றிய செய்தி பூமியையும் நரகத்தையும் துக்கத்தாலும் கசப்பான அழுகையாலும் நிரப்பும். பூமியின் அனைத்து இனத்தவர்களும் அவரைப் பார்த்து புலம்புவார்கள் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம், நரகவாசிகள் அனைவரும் அவ்வாறே புலம்புவார்கள். பின்னர் துன்மார்க்கரின் ஆத்துமாக்கள் தங்கள் சரிரங்களுடன் ஒன்றிணைந்து நியாதிபதியின் முன் நிற்க வேண்டும். அவர்கள் விருப்பத்துடன் வரமாட்டார்கள். ஆனால் ஒரு குற்றவாளி தனது சிறையிலிருந்து மரண தண்டனைக்காக வெளியே இழுக்கப்பட்டு வருவது போல் வெளியே இழுக்கப்பட்டு வருவார்கள். அவர்கள் இறந்தபோது பூமியை விட்டு நரகத்திற்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இப்போது அவர்கள் கடைசி நியாயத்தீர்ப்புக்குச் செல்ல நரகத்திலிருந்து வெளியே வருவதை மிகவும் விரும்ப மாட்டார்கள். அது அவர்களுக்கு விடுதலையாக இருக்காது: அது அவர்களின் மரணதண்டனைக்கு வெளியே வருவதாக மட்டுமே இருக்கும். அவர்கள் பின்வாங்குவார்கள், ஆனால் அவர்கள் வர வேண்டும். பிசாசுகளும் சபிக்கப்பட்ட ஆவிகளும் ஒன்றாக வர வேண்டும். அப்போது கடைசி எக்காளம் கேட்கப்படும்; இது துன்மார்க்க மனிதர்களுக்கும் பிசாசுகளுக்கும் இதுவரை கேட்டதிலேயே மிகவும் பயங்கரமான சத்தமாக இருக்கும். பூமியில் வசிப்பவர்களாகக் காணப்படும் துன்மார்க்கர்கள் மட்டுமல்ல. அவர்களின் கல்லறைகளில் உள்ளவர்களும் அதைக் கேட்பார்கள். "இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்: அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்" (யோவான் 5:28-29).

பின்னர் துன்மார்க்கரின் ஆத்துமாக்கள் மீண்டும் தங்கள் உடல்களுக்குள் நுழைய வேண்டும். அவை வேதனை மற்றும் துயரத்தின் உறுப்புகளாக மட்டுமே தயாராக இருக்கும். பாவம் மற்றும் துன்மார்க்கத்தின் உறுப்புகளாகவும் கருவிகளாகவும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த உடல்கள், அவற்றின் பசி மற்றும் இச்சைகளை அவர்கள் அனுபவித்து திருப்திப்படுத்திய அந்த உடல்கள் மீண்டும் அவர்களுக்கு முன் வரும்போது அது அவர்களுக்கு ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கும். அவர்கள் இறந்தபோது ஆன்மாவையும் உடலையும் பிரிப்பது அவர்களுக்கு பயங்கரமாக இருந்தது. ஆனால் உயிர்த்தெழுதலில் அவர்கள் மீண்டும் சந்திப்பது மிகவும் பயங்கரமாக இருக்கும்... இவ்வாறு அவர்கள் தங்கள் கல்லறைகளிலிருந்து எழுந்து, தங்கள் கண்களை உயர்த்தி, தேவனுடைய குமாரனை வானத்தின் மேகங்களில் பிதாவின் மகிமையில் அவருடைய பரிசுத்த தேவதூதர்கள் அனைவருடனும் வருவதை காண்பார்கள். (மத்தேயு 25:31), பின்னர் அவர்கள் தங்கள் நியாதிபதியை காணக்கூடாத பயங்கரமான மகிமையில் காண்பார்கள். (இது) அவர்கள் இதுவரை கண்டிராத அற்புதமான காட்சியாக இருக்கும். மேலும் அது புதிய பயங்கரங்களைச் சேர்க்கும். அவர் தோன்றும் அந்த வியப்பான மற்றும் பயங்கரமான மாட்சிமையும். அவரது எல்லையற்ற பரிசுத்தத்தின் வெளிப்பாடும் அவர்களின் ஆன்மாக்களைத் துளைக்கும்...

பின்னர் அவர்கள் தங்கள் நியாயாதிபதியின் முன்பாகத் தங்கள் கணக்கை கொடுக்க ஆஜராக வேண்டும். அவர்களை மூடி, ஆட்டுக்குட்டியின் கோபத்திலிருந்து மறைப்பதற்கு, அவர்கள் மீது விழுவதற்கு மலைகள் அல்லது பாறைகள் எதுவும் இருக்காது. அவர்களில் பலர் அந்த நேரத்தில் மற்றவர்களைக் காண்பார்கள். (சிலர்) முன்பு இவர்களுக்கு அறிமுகமானவர்கள், அவர்கள் மகிமையான உடல்களுடன். மகிழ்ச்சியான முகபாவங்களுடனும், துதிப் பாடல்களுடனும் தோன்றுவார்கள், மேலும் இவர்கள் பின்தங்கிய நிலையில், வானத்தில் கர்த்தரைச் சந்திக்க இறக்கைகளுடன் அவர்கள் ஏறுவார்கள். பலர் தாங்கள் விடப்பட்டு, தங்கள் முன்னாள் அண்டை வீட்டாரையும், அறிமுகமானவர்களையும், தங்கள் தோழர்களையும், தங்கள் சகோதரர்களையும், தங்கள் மனைவிகளையும் அழைத்துச் செல்லப்படுவதைக் செல்வதைக் காண்பார்கள். அவர்கள் நியாயாசனத்திற்கு முன்பாகச் சென்று தோன்ற அழைக்கப்படுவார்கள். அவர்கள் எவ்வளவு விருப்பமில்லாமல் விட்டாலும் போக வேண்டும். அவர்கள் பிசாசுகள் மற்றும் துன்மார்க்க மனிதர்களின் நடுவில் கிறிஸ்துவின் இடது பக்கத்தில் நிற்க வேண்டும். இது மீண்டும் இன்னும் ஆச்சரியத்தை அதிகரிக்கும். மேலும் அவர்களின் திகில் இன்னும் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும். அந்த கூட்டம் எப்படியான திகிலுடன் ஒன்று சேரும்!

பின்னர் அவர்கள் தங்கள் கணக்கை கொடுக்க அழைக்கப்படுவார்கள். பின்னர் இருளின் மறைவான காரியங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும். பின்னர் அவர்களின் இருதயங்களின் எல்லா துன்மார்க்கங்களும் தெரியவரும். பின்னர் அவர்கள் செய்த உண்மையான துன்மார்க்கம் அறிவிக்கப்படும். பின்னர் அவர்கள் உலகத்தின் கண்களுக்கு மறைத்து வைத்திருந்த அவர்களின் இரகசிய பாவங்கள் வெளிப்படும். பின்னர் அவர்கள் மன்றாடி, மன்னிக்கவும் நியாயப்படுத்தவும் பயன்படுத்திய பாவங்கள் அவர்களின் உண்மையான வெளிச்சத்தில் வெளிப்படும். பின்னர் அவர்களின் அனைத்து பயங்கரமான கோபங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட அவர்களின் அனைத்து பாவங்களும் முன்வைக்கப்படும். அவர்களின் அனைத்து அசுத்தங்களும் அவர்களின் நித்திய அவமானத்திற்கும் அவமதிப்புக்கும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும். பின்னர் அவர்கள் தங்கள் வாழ்நாளில் வெளிச்சம் போட்டுக் காட்டிய பல விசயங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பது தோன்றும். பின்னர் இவ்வளவு மகிமை வாய்ந்த மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரை இவ்வளவு மோசமாக நடத்தியதில் அவர்களின் குற்றம் எவ்வளவு பயங்கரமானது என்பது தோன்றும்.

உலகம் முழுவதும் அதைப் பார்க்கும்! பலர் அவர்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்பில் எழுந்து அவர்களைக் குற்றப்படுத்துவார்கள்: அவர்களால் துன்மார்க்கத்திற்குத் தூண்டப்பட்ட அவர்களின் தோழர்கள், தங்கள் முன்மாதிரியால் பாவத்தில் கடினப்படுத்தப்பட்ட மற்றவர்கள் அவர்களில் பலருக்கு எதிராக எழுவார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது எந்த நன்மைகளையும் பெறாத புறஜாதியினர் மற்றும் அவர்களில் பலர் இன்னும் இவர்களை விட சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் அவர்களுக்கு எதிராக எழுவார்கள். அவர்கள் ஒரு சிறப்புக் கணத்திற்கு அழைக்கப்படுவார்கள்: நியாதிபதி அவர்களிடம் கணக்குக் கேட்பார், அவர்கள் வாயடைத்து விடுவார்கள், அவர்கள் ஊமையாக இருப்பார்கள், அவர்களின் சொந்த மனசாட்சி அவர்களுக்கு எதிராக சாட்சியாளித்து அவர்களுக்கு எதிராக சத்தமாகக் கூக்குரலிடும். ஏனென்றால், அவர்கள் பாவம் செய்த படியால் தேவன் எவ்வளவு பெரியவர் மற்றும் பயங்கரமானவர் என்பதை அவர்கள் அப்போது காண்பார்கள். பின்னர் அவர்கள் இடது பக்கத்தில் நிற்பார்கள், அதே நேரத்தில் பூமியில் அவர்கள் அறிந்த மற்றவர்கள் கிறிஸ்துவின் வலது பக்கத்தில் மகிமையில் அமர்ந்திருப்பதையும், சூரியனைப் போல பிரகாசிப்பதையும், கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருடன் நியாயந்தீர்க்கவும் அவர்களைக் குற்றந்தீர்க்கவும் அமர்ந்திருப்பதையும் அவர்கள் காண்பார்கள்.

பின்னர் நியாயாதிபதி அவர்கள் மீது கண்டனத் தீர்ப்பை உச்சரிப்பார். "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவார்களைப் பார்த்து அவர் சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுககாகவும் அவன தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.” (மத்தேயு 25:41). இந்த தண்டனை பயங்கரமான கம்பீரத்துடன் உச்சரிக்கப்படும். மிகுந்த கோபம் இருக்கும்; பின்னர் நீதிபதியில் பயங்கரமான கோபம் தோன்றும் அவர் தீர்ப்பை உச்சரிக்கும் அவரது குரலில், இந்த வார்த்தைகள் உச்சரிக்கப்படும் துன்மார்க்கரின் இதயங்களில் என்ன ஒரு திகிலையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்! ஒவ்வொரு வார்த்தையும் எழுத்தும் அவர்களுக்கு மிகவும் அற்புதமான இடியைப் போல இருந்து, மேலும் கடுமையான மின்னலைப் போல அவர்களின் ஆன்மாக்களைத் துளைக்கும்! நீதிபதி அவர்களைத் தம்மை விட்டுப் போகச் சொல்வார். அவர் அவர்களைத் தம்முடைய பிரசன்னத்திலிருந்து மிகவும் அருவருப்பானவர்களைப் போல விரட்டுவார். மேலும் அவர் அவர்களுக்கு சபிக்கப்பட்டவர்கள் என்ற அடைமொழியைக் கொடுப்பார்: அவர்கள் ஒரு சபிக்கப்பட்ட கூட்டமாக இருப்பார்கள்,

மேலும் அவர் அவர்களைத் தம்முடைய பிரசன்னத்திலிருந்து புறப்படச் சொல்வது மட்டுமல்லாமல், நித்திய அக்கினிக்குள், அவர்களுடைய ஒரே பொருத்தமான வசிப்பிடமாக அங்கே வசிக்கச் சொல்வார். நெருப்பின் பயங்கரத்தைக் காட்டுவது என்னவென்றால், அது பிசாசுக்கும் அவனுடைய தேவதூதர்களுக்கும் தயாராக உள்ளதே. தேவனின் அந்த பெரிய எதிரிகளான பிசாசுகள் வேதனைப்பட வேண்டிய அதே நெருப்பில் அவர்கள் என்றென்றும் கிடப்பார்கள்! இந்த தண்டனை உச்சரிக்கப்படும்போது. இடது பக்கத்தில் உள்ள பரந்த கூட்டத்தினரிடையே. ஒரு புதிய முறையில் நடுக்கம், துக்கம். அழுகை மற்றும் பற்கடிப்பு இருக்கும் இதற்கு முன்பு இருந்த அனைத்தையும் தாண்டி. பெருமையும் மேன்மையும் நிறைந்த ஆவிகளுமான பிசாசுகள் வெறுமனே இந்த வாக்கியத்தின் எண்ணங்களில் பல யுகங்களுக்கு முன்பே நடுங்கினால், அது உச்சரிக்கப்படும்போது அவர்கள் எப்படி நடுங்குவார்கள்! ஐயோ! துன்மார்க்கர்கள் எப்படி நடுங்குவார்கள்! வலது பக்கத்தில் இருப்பவர்களுக்கு அறிவிக்கப்படும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்கியத்தைக் கேட்பதன் மூலம் அவர்களின் வேதனை அதிகரிக்கவே அதிகரிக்கும்: "அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவார்களைப் பார்த்து வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்." (மத்தேயு 25:34).

பின்னர் தீர்ப்பு நிறைவேற்றப்படும். நீதிபதி அவர்களைப் போகச் சொல்லும்போது, அவர்கள் போக வேண்டும். இருப்பினும் விருப்பம் இல்லாவிட்டாலும், அவர்கள் போக வேண்டும். தீர்ப்பு முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் உலக முடிவு வரும். இந்த உலகத்தின் சட்டகம் கரைந்து போகும் வானங்கள் கரைந்து போகும். பின்னர் பூமி தீக்கிரையாக்கப்படும். தேவனுடைய கோபத்தால் ஒரு காலத்தில் உலகத்தை வெள்ளத்தால் அழித்தது போல. இப்போது அவர் அதையெல்லாம் நெருப்பு வெள்ளத்தில் மூழ்கடிப்பார்; வானங்கள் எரிந்து கரைந்து போகும். "பூதங்கள் வெந்து உருகிப்போம்" (2 பேதுரு 3:10); பின்னர் அந்தப் பெரிய பிசாசுகளும் துன்மார்க்க மனிதர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட நித்திய தீக்குள் நுழைய வேண்டும்.

இந்த நிலையில், அவர்கள் முடிவில்லாத நித்திய யுகங்கள் முழுவதும் நிலைத்திருப்பார்கள். அவர்களின் தண்டனை அப்போது நிறைவடையும், மேலும் அது இந்த நிறைவில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களின் ஆன்மாக்கள் தனி நிலையில் இருந்தபோது, அவர்கள் நீண்ட காலமாக பயந்து நடுங்கிய அனைத்தும் இப்போது அவர்கள் மீது வரும். அவர்கள் ஒருபோதும் அணையாத நெருப்பில் வசிப்பார்கள், இங்கே அவர்கள் நித்தியத்தை களைந்து போக வேண்டும்... மில்லியன் கணக்கான ஆண்டுகள் அல்லது மில்லியன் கணக்கான யுகங்களைக் கணக்கிடுவது இல்லை; இங்குள்ள அனைத்து எண்கணிதமும் தோல்வியடைகிறது. பெருக்கல் விதிகள் எதுவும் அந்த அளவை எட்ட முடியாது. ஏனென்றால் முடிவே இல்லை. அவர்களின் நித்தியத்தை கடந்து செல்ல, அந்த வேதனைகளுடன் மோதுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு இருக்காது. இது என்றென்றும் அவர்களின் வேலையாக இருக்கும். தேவனிடம் அவர்களுக்காக வேறு எந்தப் பயனும் வேலையும் இருக்காது. அவர்களின் இருப்பின் முடிவுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய வழி இதுதான். அவர்களுக்கு ஒருபோதும் ஓய்வும், எந்தப் பரிகாரமும் இருக்காது. ஆனால் அவர்களின் வேதனைகள் அவர்களின் உயரத்திற்குத் தாங்கும். மேலும் அவைகள் அவர்களுக்குப் பழக்கமாகிவிடுதால் ஒருபோதும் எளிதாக வளராது. நேரம் அவர்களுக்கு நீண்டதாகத் தோன்றும். ஒவ்வொரு கணமும் அவர்களுக்கு நீண்டதாகத் தோன்றும், ஆனால் அவர்கள் தங்கள் வேதனையின் யுகங்களை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார்கள்.

ஆசிரியரைப் பற்றி...

ஜோனாதன் எட்வர்ட்ஸ் (1703-1758): அமெரிக்க சபை ஊழியர்; பாரிய எழுப்புதலின் போது நன்கு அறியப்பட்ட பியூரிட்டன் பிரசங்கி மற்றும் எழுத்தாளர்; கனெக்டிகட் காலனியின் கிழக்கு வின்ட்சரில் பிறந்தார்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.