36
அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம் என்றார். அதற்கு வீரர்கள், “உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யுங்கள். குருக்களோ, “நாம் இங்கே கடவுளை அனுகுவோம் “என்றார்கள்.
37
சவுல் கடவுளை நோக்கி, “நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா? அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ? என்று கேட்டார்.
38
ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்: இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கவனியுங்கள்.
39
இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக மகன் யோனத்தான் இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான் “ என்றார். எனினும் அவனும் மறுமொழி கூறவில்லை.
40
மேலும் அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, “நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம். என்று கூற வீரர்களும், “உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும் “ என்று சவுலிடம் சொன்னார்கள்.
41
ஆகவேசவுல், இஸ்ரயேலின் கடவுலாகிய ஆண்டவரே! முன் உண்iமையை வெளிப்படுத்தும் என்று மன்றாட, யோனத்தான் மீதும் சீட்டு விழுந்தது: வீரர்களோ தப்பினர்.
42
பிறகு சவுல், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள், எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.
43
சவுல் யோனத்தானை நோக்கி நீ என்ன செய்தாய்? சொல் “ என வினவ, அதற்கு யோனத்தான், “என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார் “ என்று கூறினார்.
44
அதற்குச் சவுல், யோனத்தான் நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்: அதற்கு மேலும் செய்யட்டும் என்றார்.
45
ஆனால் மக்கள் சவுலை நோக்கி, “இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில் கடவுளின் கருணையோடுத்தான் இன்று அவர் செயல்பட்டார். என்றார்க்ள. இவ்வாறு வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.
46
சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் செல்ல, பெலிஸ்தியர் தாங்கள் இடத்துக்குச் சென்றார்.