1சாமுவேல் 10:2-7 - WCV
2
இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குயில்ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் என்னிடம் “நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன: இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி “என் மகனுக்காக என் செய்வேன்? என்று கூறிக் கொண்டிருக்கிறார் “என்று சொல்வார்கள்.
3
நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று
4
அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.
5
அதன் பிறகு பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஒர் அறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுககு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவரமடைந்து பேசுவார்.
6
பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
7
இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.