36
கிதியோன் கடவுளிடம்,”நீர் கூறியபடி இஸ்ரயேலை என்மூலம் விடுவிக்க விரும்பினால்,
37
இதோ! நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன்.கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார்.
38
அவ்வாறே நடந்தது.மறுநாள் காலை அவர் எழுந்து கம்பளியைப் பிழிந்தார்.அவர் கம்பளியை முறக்கிப் பிழிய, பனி நீர் ஒரு கிண்ணம் முழுவதையும் நிரப்பியது.
39
கிதியோன் கடவுளிடத்தில்,”எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர்.மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன்.இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன்.கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டுமு.தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும்” என்றார்.
40
அவ்விரவில் ஆண்டவர் அவ்வாறே செய்தார்.கம்பளி மட்டும் உலர்ந்திருக்க, தரை மீதெங்கும் பனி இறங்கி இருந்தது.