8
மனோவாகு ஆண்டவரை நோக்கி,”என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும்” என்று கூறி வேண்டினார்.
9
கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார்.கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார்.அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார்.அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.
10
அவர் தம் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று அவரிடம்,”இதோ! அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார்” என்று தெரிவித்தார்.
11
மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார்.அவர் அம்மனிதரிடம் வந்து,”இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?” என்று கேட்டார்.அதற்கு அவர்,”நான் தான்” என்றார்.
12
மனோவாகு”உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.