எபிரெயர் 11:32-40 - WCV
32
இன்னும் கூறவேண்டுமா? கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு தாவீது, சாமுவேல் ஆகியோர்பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை.
33
நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்: நேர்மையாகச் செயல்பட்டார்கள்: கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்: சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்:
34
தீயின் கொடுமையைத் தணித்தார்கள்: வாள் முனைக்குத் தப்பினார்கள்: வலுவற்றராயிருந்தும் வலிமை பெற்றார்கள்: போரில் வீரம் காட்டினார்கள்: மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.
35
பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர்.
36
வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்: விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர்.
37
சிலர் கல்லெறிபட்டனர்: இரண்டாக அறுக்கப்பட்டனர்: வாளுக்கு இரையாகி மடிந்தனர்: செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்: வறுமையுற்று வாடினர்: துன்புறுத்தப்பட்டனர்: கொடுமைக்கு உள்ளாயினர்.
38
அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலை வெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.
39
இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.
40
ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவு பெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில்கொண்டு நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.