உபாகமம் 30:6-8 - WCV
6
கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார்.அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய்.அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.
7
கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.
8
நீ ஆண்டவரிடம் திரும்பிவா.அவரது குரலுக்குச் செவிகொடு.நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.