உபாகமம் 28:30-32 - WCV
30
நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்: வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்: ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய்.நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்: ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.
31
மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்: ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது.உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்: அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது.உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும்.அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.
32
கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர்.அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும்.உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.