உபாகமம் 19:16-21 - WCV
16
ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி ஒரு பொய்ச்சாட்சி முன்வந்தால்,
17
வழக்காடுகிற இருவரும் ஆண்டவரின் திருமுன் அன்றைய நாளில் ஊழியம் புரியும் குருக்களிடமும் நீதிபதிகளிடமும் வரட்டும்.
18
நீதிபதிகள் தீர விசாரிப்பர்.சான்று சொன்னவன் பொய்ச்சாட்சி என்றும், தன் சகோதரனை அநியாயமாகக் குற்றம் சாட்டியுள்ளான் என்றும் அறிந்தால்,
19
அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்ததுபோலவே, அவனுக்குச் செய்யுங்கள்.இவ்வாறு, உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றுங்கள்.
20
அப்போது அதைக்கேட்டு மற்றவர்களும் அஞ்சுவர்.அத்தகைய தீச்செயலை உங்களிடையே எவரும் செய்யத் துணியார்.
21
நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே: உயிருக்கு உயிர்: கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்!