1கொரிந்தியர் 3:6-9 - WCV
6
நான் நட்டேன்: அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்: கடவுளே விளையச் செய்தார்.
7
நடுகிறவருக்கும் பெருமை இல்லை: நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.
8
நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர்.
9
நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.