1கொரிந்தியர் 1:10-13 - WCV
10
சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.
11
என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.
12
நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன் “ என்றோ “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் “ என்றோ “நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் “ என்றோ, “நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் “ என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.
13
கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?