4
ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்: கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில்.”உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது: உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!
5
நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா?-இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன்-
6
ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்?