ரோமர் 11:7-10 - WCV
7
அப்படியானால் என்ன? தாங்கள் தேடியதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அடைந்து கொள்ளவில்லை. அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சிலரே அடைந்தனர்: எஞ்சியோர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.
8
“ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்: காண்கின்ற கண்களையும் கேட்கின்ற செவிகளையும் இந்நாள்வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை” என்று மறைநூலில் எழுதியுள்ளது.
9
“அவர்களுடைய விருந்துகள் அவர்களுக்குக் கண்ணியாகவும் பொறியாகவும் தடைக்கல்லாகவும் தண்டனையாகவும் ஆகட்டும்.
10
அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளி இழக்கட்டும்: அவர்களின் முதுகு கூன்விழுந்தே இருக்கட்டும்” என்று தாவீதும் கூறுகின்றார்.