லூக்கா 13:6-9 - WCV
6
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்:”ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.
7
எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், “பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்: எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?” என்றார்.
8
தொழிலாளர் மறுமொழியாக, “ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்: நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.
9
அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி: இல்லையானால் இதை வெட்டிவிடலாம்” என்று அவரிடம் கூறினார்.”