மத்தேயு 19:17-20 - WCV
17
இயேசு அவரிடம், “ நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும் “ என்றார்.
18
அவர், “எவற்றை? “ என்று கேட்டார். இயேசு, “ கொலை செய்யாதே: விபசாரம் செய்யாதே: களவு செய்யாதே: பொய்ச்சான்று சொல்லாதே:
19
தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக “ என்று கூறினார்.
20
அந்த இளைஞர் அவரிடம், “ இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன? “ என்று கேட்டார்.