மத்தேயு 14:27-31 - WCV
27
உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “ துணிவோடிருங்கள் : நான்தான், அஞ்சாதீர்கள் “ என்றார்.
28
பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் “ என்றார்.
29
அவர், “வா “ என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
30
அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் “ என்று கத்தினார்.
31
இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “ நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? “ என்றார்.