மத்தேயு 13:37-43 - WCV
37
அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: “நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்:
38
வயல், இவ்வுலகம்: நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்: களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்:
39
அவற்றை விதைக்கும் பகைவன், அலகை: அறுவடை, உலகின்முடிவு: அறுவடை செய்வோர், வானதூதர்.
40
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
41
மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்:
42
பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
43
அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். “