17
உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்: நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்: வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்” என்றனர்.
18
ஆனால் பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது:
19
இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்: ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.