ஏனெனில் அவை புனிதமானவை: பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன: அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்: அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்: ஆகவேதான் அவை புனிதமானவை: இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.