சகரியா 10:9-12 - WCV
9
மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10
நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.
11
எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்: கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்: பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்: அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்: எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.
12
ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்: ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், “ என்கிறார் ஆண்டவர்.