செப்பனியா 3:15-20 - WCV
15
ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்: உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
16
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்: உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
17
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: அவர் மாவீரர்: மீட்பு அளிப்பவர்: உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்: தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்: உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
18
அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்: ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.
19
இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்: கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்: ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்: அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்.
20
அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்: ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்” என்கிறார் ஆண்டவர்.