செப்பனியா 3:1-4 - WCV
1
கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
2
எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை: கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை: ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை: தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
3
அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்: அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
4
அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் வஞ்சகமிக்க மனிதர்: அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித் திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.