9
வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்: பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்: கருவூலங்கள் மிகப்பெரியவை: அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை.
10
வெறுமை! பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது: கால்கள் தள்ளாடுகின்றன: திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது: முகங்ளெல்லாம் வெளிறிப் போகின்றன.
11
சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ?
12
சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று.
13
இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்: உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்: உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்: நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்: உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.