3
தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்: தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்: பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்: இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.
4
அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர்! அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்! அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டு: இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.
5
அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்: தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டாம். உம் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு!