42
நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு.
43
நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது.அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள்.ஏனெனில் அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44
நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள்.எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள்.ஏனெனில், நான் தூயவர்.நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது.