21
மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன்” என்கிறார் ஆண்டவர். “நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்: அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும்.
22
நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல்வழியாய் மறுமொழி தரும்” என்கிறார் ஆண்டவர்.
23
நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், “லோ ருகாமா” வுக்குக் கருணை காட்டுவேன்: “லோ அம்மீ” யை நோக்கி, “நீங்கள் என் மக்கள்” என்பேன்: அவனும் “நீரே என் கடவுள்” என்பான்.