எசேக்கியேல் 7:20-24 - WCV
20
அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்: அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்: எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.
21
மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்: அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.
22
அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்: அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்: கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.
23
நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்: நாடு கொலைத் தீர்ப்புகளாலும் நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன.
24
ஆகையால் வேற்றினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்: அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்: வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்: அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும்.