2
மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், “நானே கடவுள்: நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்” என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல: மனிதனே!
3
தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!
4
உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்: உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய்.
5
உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்: உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.