எசேக்கியேல் 27:25-30 - WCV
25
தர்சீசு நகர்க் கப்பல்கள் உன் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன: கடல் நடுவே மிகுந்த சரக்கால் சுமத்தப்பட்டுள்ளாய்!
26
தண்டு வலிப்போர் உன்னை ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்: ஆனால் கீழைக்காற்று கடலின் நடுவே உன்னை உடைத்துவிடும்.
27
உன் கப்பல் உடையும் நாளில் உன் செல்வமும் வணிகப் பொருள்களும் உன் கடலோடிகளும் மாலுமிகளும் பழுதுபார்ப்போரும் வணிகரும் உன் போர்வீரர் யாவரும், கப்பலில் இருக்கும் எல்லாரும் ஆழ்கடலில் மூழ்கிப் போவர்.
28
உன் மாலுமிகள் ஓலமிடுகையில், கடற்கரை நாடு அதிரும்.
29
தண்டு வலிப்போர் அனைவரும் கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்: கடலோடிகளும் எல்லா மாலுமிகளும் கடற்கரையில் வந்து நிற்பர்.
30
உரத்த குரலெழுப்பி, உன்னைக் குறித்துக் கசந்தழுவர்: புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர்: சாம்பலில் புரண்டழுவர்.