எரேமியா 43:9-11 - WCV
9
பெரும் கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்துக்கொள். தகபனகேசில் பார்வோன் அரண்மனை வாயில்களத்தில் உள்ள காரையில் யூதா மக்கள் முன்பாக அவற்றை மறைத்து வை.
10
பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன். நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன் தன் அரியணையை அமைத்துத் தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான்.
11
அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்: கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்: வாளுக்குரியோர் வாளால் மாள்வர்.