அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, “ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?” என்று வினவினான். அதற்கு எரேமியா, “ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்” என்றார்.