21
அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்: திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.
22
வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை: மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை: மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்: நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள்.
23
வீணாக அவர்கள் உழைப்பதில்லை: தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை: ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோர்pன் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள்.
24
அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்: அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.
25
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்: சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்: பாம்பு புழுதியைத் தின்னும்: என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.