ஏசாயா 59:13-15 - WCV
13
ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்: எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்: ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்: பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.
14
நீதி துரத்தப்பட்டது: நேர்மை தொலையில் நின்றது: பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது: உண்மைக்கு அங்கே இடம் இல்லை.
15
உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது: தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்: ஆண்டவர் அதைக் கண்டார்: அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.