ஏசாயா 57:14-16 - WCV
14
அமையுங்கள்: பாதையை அமையுங்கள்: அதைத் தயார் செய்யுங்கள்: “என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்” என்று கூறப்படும்.
15
உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், “தூயவர்” என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே: உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்: நொறுக்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்: நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.
16
ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்: எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்: ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.